Dienstag, 8. Mai 2012

என்னவனே ....
உன் இதயம்
இன்பச் சிறை ...என்று இருந்தேன் ..
வாழ்நாள் முழுவதும்
என்னை நீ துன்ப சிறையில்
தள்ள போவது
தெரியாமல் !!! நான்.என்கிறாயே

கடமை உணர்வும் காருண்யமும்
உயரிய நட்பும்
மனதில் உறுதியும்
கொண்டு வாழ்................
வாழும் நாள் முழுக்க
சிறையே இன்பமாய்
அன்னவனின் இதய சிறைகளில்
கூண்டுக் கிளியாய்- நீ

கழிக்கும் நாட்கள்

கழிவல்ல ...பெண்ணே

அதுவே

கழிகொள் உறவு

என் தோழி
வருமானம் மீறி
அளவுக் கதிகமாய் ஆசைகள்   எதுக்கு?

இருக்கும் நாள்   ,,இனிக்க 
கடன் வாங்கி ...வாழாதே !
கார் காலம்  இருட்டாகி மழை நீர் 
கொட்டுதல் போல் அழுது
கண் வீங்கி
மதி கெட்டு..
மானம் இழந்து வாழாதே


பூமி தன்னில்
மதி இழந்து  மானம் ..பறந்தோட -உன்
உறவுகளே கை கொடுக்காது   
                  
இவர்கள்
எட்டி நின்று  வேடிக்கையாய்..
இடித்துரைக்கார்
உன்னை
இழித் துரைப்பார்


கூலிக்கு மாரடிக்கும்  கூட்டம்  அது
உணர்ந்து கொள்

இன்னல் உற்ற பொழுது .
உன்னை  ஏற்றமிகு மனிதனாய்
உலகதனில்   மின்ன வைக்கும்
ஏந்திழையாள்   உன் தாரம் -என்பதனை
புரிந்து கொள் 


நிழலாக   தொடரும் உறவு அது
கழல் தன்னை   கழற்றி   - தன உறவான   கோவலனின்
 உயிருக்காய்..... மன்றாடி
நீதி கெட்டு
ஊரையே   கொளுத்தி -புகழ் காக்கும்
கண்ணகி  கள் வாழும் பூமி இது
தெளிந்து கொள்


[ஸ்ரீ ராஜா ]