Mittwoch, 19. Oktober 2011

என்னுடையதல்ல

சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
 சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
 செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
 இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Montag, 17. Oktober 2011

மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை தொடர்கிறது என்றோ ஒரு நாள் நனவாகும் என்னும் நம்பிக்கையில்

அன்பே !அன்பே !
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
என்கிறாயே


நீ காட்டும் எட்டுத்திசையும்
தறிகெட்டு அலைந்து விட்டேன்
ஒரு முறையேனும் உன் மார்பை சுட்டிகாட்டி சொல்லு
உன் இதயத்தில் நான் இல்லை என்று

பல முறை பிறந்தாலும்
என் மார்பில் நீ தூங்கும் காலம் வரும்
என்ற என் நம்பிக்கையின் ஒளிக்கீற்று
என் மூச்சை உயிர் பிக்கிறது


கனவின் நீளம்
கண் விழித்ததும் முடிவடையும்
என்கிறாயா?

பேதை பெண்ணே
நினைவெல்லாம் நீ தானே
என் நனவே கனவாக
மாற்றியவள் நீ என்பதால்
என் நினைவின் நீளம் உன்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்


ஒவ்வொரு வாழ்வின் முடிவெல்லை
மரணமாக இருக்கலாம் ,
ஆனால் அன்பை வென்றவர்கள்
இதயத்தில் வாழ்வார்கள்

உடல்கள் அழிக்கப்படலாம்
கண்ட உண்மைகள்
நனவாக தொடர்ந்து வரும்

ஒவ்வொரு மரணத்தின்
முதல் எல்லை
வாழ்வாக இருந்ததில்லை....
என்று சொல்பவர்கள் உணருங்கள்

பிறக்கும் மனிதன் பிணமாக பிறந்து
ஜனனிக்கும் பொழுது
அம்மா என அழுது
பூமியில் மனிதனாக
அடையாளம் பெறுகிறான்

அதன் பின் கனவும் நனவும்
வாழ்வின் போராட்டமாக
மாற
மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை
தொடர்கிறது
என்றோ ஒரு நாள் நனவாகும்
என்னும் நம்பிக்கையில்


நீ விட்ட மூச்சு தானே என் சுவாசம் என்றான பின்பும் கூட எமக்குள் பிரிவு ?

பெண்ணே நில் நான் இழந்தது
உன் அன்பைத்தானே
இருந்தும் சிதைந்தது என்ன ? எங்கள் அமைதிதானே
..
நீ விட்ட மூச்சு தானே
என் சுவாசம் என்றான பின்பும்
கூட எமக்குள் பிரிவு ?
ஆச்சரியம் !!!!!!!!!

நுரஜீரல்ம் காற்றும் ஒட்ட வில்லை
மனிதர் வாழ ஏது வாகிறதே!!!!!!!!!!!!!!

உன் இதயம் சொல்வதை கேள்
மற்றவர் சொல்வதை உன் மனதில் இட்டு அலசு
என் மனதில் அன்பெனும் உளிகளால்
உன்னையே
இருதயத்தில் சிலையாய் வடித்தவளே
எப்போதும் உன்சிந்தனை நினைவுகள்
என்னை உயிரோடு தூக்கில் இடுகின்றனவே

துரத்தும் உன் நினைவுகள்
இதயத்தின் இயக்க மாய் ..
என்னை கொல்கிறதே
அன்பே !
அந்நேரம் உனக்குள் நான் தொலைந்து
போ னதை மீண்டும்
நினைவு படுத்தும் .


தூக்கத்தில் இருக்கும் உன் மனது
என்று தான் விழிக்குமோ ?
அது வரையில் தடம் புரளா
உன் அன்பெனும் தண்டவாளத்தில்
ரயிலாக நான்

Sonntag, 2. Oktober 2011

வாழ்கின்ற வாழ்வில் -நீ என் மூல தனம் வாடுகின்ற இவ் வேழைக்கு-நீ நந்தவனம் காட்டாதே எனக்கு நீ கள்ளத்தனம்



என்றோ ஒரு நாள் எனக்காக
உன் உதடு சொல்லும் ஒரு வார்த்தைக்காய்
நம்பிக்கையின் ஒளியில் அந்தரிக்கும்
ஜீவனாய் நான்



வான் மதியாய்  என் வாழ்வில்
ஒளியேற்ற  வா என்றேன்


நீயோ என்னை பழிவாங்க
அமாவாசை யாய் இருண்டு அட்டமி நவமி யாய்
தேய்ந்து வளர்ந்து  பூரணையாய்
  வதன நிலவாய்
ஒளிகாட்டி இருள் காட்டி 
நின்  மதியை
ஏனோ பறிக்கிறாய்?


கூடு கட்டும்
குருவிக்கும் பேடு உண்டு
குலவுகின்ற அன்றிலுக்கும் சோடி உண்டு
கொடிமலரே எனக்கென்று  என்ன உண்டு????????????


பாடுகின்ற  குயில்கள் எல்லாம்  கீதம் பாட
தேடுகின்றேன் உந்தனை நான்
தோழியாக !


கூடு விட்டு  ஆவி தான் போயிடினும்
குலமகளே
நீ தானே  எந்தனது
 இதய ராணி

ஆடுகின்ற  ஆட்டம் எல்லாம்
வாழ்க்கை அல்ல
தேடுகின்ற  சுகம் எல்லாம்
 சொர்க்கம் அல்ல


மாடு போல் உழைத்தாலும்
வையகத்தில்
 மகிழ்ந்து வாழ  உறவொண்டு
 வேணுமடி


திகட்டாத  தேன் சுவைகள்
 இல்லறத்தில்
தினம் தினமாய்  குலவி நாங்கள்
மகிழ்ச்சி காண்போம்

பகட்டான  வாழ்க்கையில்
எந்த பண்பும் இல்லை
தெவிட்டாத  இன்பம் உண்டு 
 குடும்பமதில்


வாழ்கின்ற வாழ்வில் -நீ
என் மூல தனம்
வாடுகின்ற  இவ் வேழைக்கு-நீ
நந்தவனம்
காட்டாதே எனக்கு நீ
கள்ளத்தனம்


தென்றலின்  சிணுங்கல்கள் ,முத்தத்தின் சூடுகளில்
நான் தவிக்க.....................
 ,சிங்காரம்  செய்யும் வண்டுகளின் ரீங்காரம்
நெடிதான வேப்பமரக் காற்றின்  இதமான  அரவணைப்பு
இவையாவும் ?????????
கண்ணே நீ எனை பிரிந்த நாட்களின்
ஏமாற்றங்களின்  தனிமை என்னை தீ மூட்ட 


என் இதயம் கவர்
வடி வழகே ஓடி வா
நாம் மகிழ்ந்து வாழ்ந்து -உயிரான காதலுக்கு
முடியை சூட்ட ...................