Freitag, 16. Dezember 2011

சுருக்கமாக சொன்னால்,

நோபல் பரிசைப் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் என்ற பெருமையைத் தனதாக்கிக்கொண்ட வங்கக் கவிஞர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஓராண்டு காலத்திற்கு
நடைபெறவுள்ளன.இந்தியா மற்றும் பங்களாதேஷ் அரசுகள் கூட்டாக இணைந்து இக்கொண்டாட்டங்களை நடத்துவதென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த ஓராண்டுக் கொண்டாட்டங்களுக்கு முன்னோடியாக கடந்த மார்ச் 28 ஆம் திகதி இலங்கையில் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைக்கொண்ட இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இலங்கைக்கான இந்திய மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயங்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

"ரவீந்திர சங்கீதம்' என அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களை பங்களாதேஷ் நாட்டின் பிரபல இசைக் கலைஞரும் தாகூரினால் அமைக்கப்பெற்ற சாந்தி நிகேதனில் கல்வி கற்றவருமான ரிஸ்வானா சௌத்ரி பான்யா இசைத்தார்.ரவீந்திரநாத் தாகூரினால் எவ்வாறு இப்பாடல்கள் இசையமைக்கப்பட்டிருந்தனவோ அந்த மெட்டுகளில் எவ்வித மாற்றங்களும் செய்யாமல் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

"ரவீந்திர சங்கீதம்' என்றதுமே பங்களாதேஷிலும் இந்தியாவிலும் அனைவரினதும் நினைவுக்கு வரும் இசைக்கலைஞரான ரிஸ்வானா சௌத்ரி பான்யாவின் இந்த இசை நிகழ்ச்சியை மண்டபம் நிறைந்த ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.பங்களாதேஷ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மிஜாருல் கயாஸ்,இந்திய உயர்ஸ்தானிகள் அஷோக் கே காந்தா, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மஹ்பூப் உஸ்ஸமான், இலங்கையின் மூத்த அமைச்சர் சரத் அமுனுகம,அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் தேசிய கீதமான  "ஜனகன மன'மற்றும் பங்களாதேஷின் தேசிய கீதமான "அமார் ஷோனா பங்க்ளா'ஆகிய பாடல்களை யாத்த குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் இலங்கைத் தேசிய கீதத்தின் ஆக்கத்திலும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்துள்ளார்.இலங்கையின் தேசிய கீதத்தை யாத்து இசைவடிவம் கொடுத்த அமரர் ஆனந்த சமரக்கோன் தாகூரின் சாந்தி நிகேதனில் தாகூர் உயிர் வாழ்ந்த காலத்திலேயே பயின்றுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.இந்த இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இந்திய துணை உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்ரி,இலங்கையின் தேசிய கீதத்தைக் கேட்கும்போதெல்லாம் தன்னையறியாமலே அதனைத் தான் பாடத் தூண்டும் அளவுக்கு அதன் இசையும் சொற்களும் தனக்குப் பரிச்சயமாக அமைந்திருப்பதாகச் சொன்னார்.

கல்கத்தாவில் 1816 இல் தோன்றி 1941 இல் மறைந்த தாகூர் அப்போது பிளவுபடாதிருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசத்திலும் வாழ்ந்துள்ளார்.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தைப் பிரிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு சட்டமொன்றைக் கொண்டுவந்தபோது வங்காளதேசத்தின் பிரிவினைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் தாகூர்.அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் இயற்றிய கவிதையில் ஆரம்பப் பகுதியே பங்களாதேஷின் தேசிய கீதமாகத் தற்போது உள்ளது.

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நோபல் பரிசு பெற்ற "கீதாஞ்சலி' கவிதை நூல் முதலில் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது.சுகவீனமுற்றிருந்தபோது ஓய்வுக்காக தற்போதைய பங்களாதேஷாகவுள்ள கிழக்கு வங்கத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்த வேளையில் தனது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தாகூர் முயற்சித்தார்.தனது வங்க மொழி கீதாஞ்சலியிலிருந்தும் ஏனைய இரு கவிதை நூல்களிலிருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் மொழிபெயர்த்த கவிதைகளே ஆங்கிலத்தில் "கீதாஞ்சலி'என்ற பெயரில் வெளியிடப்பட்டன.

தாகூர் வெறுமனே ஒரு கவிஞர் மாத்திரமன்றி சிறுகதை,நாவல்,நாடகம்,இசைநாடகம்,சித்திரம்,தத்துவம்,இசைப்பாடல்,நடிப்பு,பேச்சு எனச் சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒருவர்.அவரின் நட்பு வட்டமோ மிகப்பரந்தது.விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டீன்,ஆங்கிலக் கவிஞர் கீற்ஸ்,மகாத்மா காந்தி,வில்லியம் ரொதென்ஸ்ரைன் என அவரது நட்பு வட்டம் விசாலமானது.

பல்வேறு நாடுகளுக்கும் தனது கலைத் துறை சார் விஜயங்களை மேற்கொண்டுள்ள ரவீந்திரநாத் தாகூர் இலங்கைக்கும் மூன்று தடவைகள் விஜயம் செய்துள்ளார்.இறுதியாக 1934 இல் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர் எழுதிய சப்மோச்சோன் என்ற நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்திருந்தார்.பின்நாட்களில் இலங்கையின் பிரதமரான எஸ். டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்க இந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்தவர்களில் ஒருவர்.அவர்இந்த நாடகம் பற்றி அப்போது டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதிய விமர்சனத்தில் நாடகத்தைப் பெரிதும் பாராட்டி எழுதியதுடன் இசையும் நாடகமும் கற்பதற்கு மாணவர்களைச் சாந்தி நிகேதனுக்கு அனுப்ப எந்தவொரு அமைப்பும் முன்வருமானால் தாம் இயன்றளவு நன்கொடைய வழங்கத் தயாராகவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் இறுதி இலங்கை விஜயத்தின்போது ஹொரணையில் அமைந்துள்ள சிறிபாலி நுண்கலைக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன் அதற்கான பெயரையும் அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.சாந்தி நிகேதன் பாணியில் மதுரக் கலைகளின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட இக்கல்லூரி இன்று சாதாரண கல்லூரியாக மாற்றம் பெற்றாலும் இலங்கையில் நுண்கலைகளின்பால் பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரித்து நுண்கலைக்கான பல்கலைக்கழகமொன்று உருவாக இக்கல்லூரி ஒரு தூண்டுகோலாக அமைந்ததென இலங்கை தாஹூர் மன்றத்தின் அமைப்பாளர் கே.எம்.எ.பண்டார தெரிவித்தார்.தாஹூரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறிபாலி கல்லூரியிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மாகவி தாகூர் தனது இலங்கை விஜயத்தின்போது கண்டிய நடன ஆட்டமுறைகளைக் கண்டு மகிழ்ந்ததுடன் அதன் சிறப்புகளைப் பெரிதும் விதந்து பாராட்டியுள்ளார்.பாராட்டுதல்களோடு மட்டும் நின்றுவிடாமல் இந்தியா திரும்பிய பின்நாட்களில் அவர் எழுதிய இசை நாடகங்களில் கண்டி ஆட்ட யுக்திகளைப் பயன்படுத்தியமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கதே.
இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைத்தனர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக பிரபலம் அடைந்தது.
கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளை புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மக்கள் மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன
இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் கலெக்டெராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.
இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத்தின் புதல்வர். இவர் 7 மே 1861(1861-05-09) ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவர் தாயார் பெயர் சாரதா தேவி. இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பமே எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சமசுக்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் பூணூல் சடங்கிற்குப் பின்னர், 14 பெப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வீட்டிலேயே வரலாறு, வானியல், அறிவியல், சமசுக்கிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.

தான் ஒரு வழக்குரைஞர் (Barrister) ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் (Brighton, London) பிரைட்டண், லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பிறகு லண்டன் சர்வகலாசாலையில் படித்தார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலேயே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழைந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழைந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.
1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அது ஒரு பிரர்த்தனைக் கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலையுடன் மரங்களும், செடிகளும் கொண்ட பூஞ்சோலையாக மிளிர்ந்தது. இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்பத்தின் நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.
இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.
1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.
1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.
1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.
இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு உந்தப் பட்டிருப்பதையும், அவர்களை அடிமைகள் போல் நடத்துவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.
1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.
இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.
1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்கலில் முப்பத்து ஒரு தேசங்களுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு
1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுட் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.
இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.
ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.
1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.


தாகூரின் படைப்புகள் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில் எழுதப்பட்டவை. ஐரோப்பா,  அமெரிக்கா, ரஷ்யா என உலகம் முழுவதும் நேசிக்கப் பட்டன. அவற்றில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தின. குறிப்பாக கீதாஞ்சலிலியை கூறலாம். 1913-ஆம் ஆண்டு கீதாஞ்சலிலி படைப்புக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார். அன்று நோபல் பரிசுப் பெற்ற முதல் ஆசியர் இவரே. வங்காள இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் தாகூரின் தாக்கம் மிகவும் அதிகம். இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கிய பன்முக சிந்தனையாளராக இரவீந்திரநாத் தாகூர் நினைவு கூறப்படுகிறார். 

இரவீந்திரநாத் தாகூர் பாரம்பரியமான இந்து குடும்பத்திலிலிருந்து வந்தவர். அவர் இந்துமத இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்.  என்றாலும், வங்காள முஸ்லீம்களின் மீது அதிக அன்பு கொண்டவர். இவரின் சிந்தனைகள் முஸ்லீம் மக்களை ஈர்த்தன. அதனால்தான் புதிதாக உருவான வங்காளதேசம்  தாகூரின் பாடலான "அமர் சோனார் பங்களா' (என் தங்கமான வங்காளம்) என்ற பாடலை தனது நாட்டின் தேசிய கீதமாக்கிக் கொண்டது.

உலகில் இந்து கலாச்சாரம், முஸ்லீம் கலாச்சாரம், மேற்கத்திய கலாச்சாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. ஆனால் தாகூரின் குடும்பம் இந்த மூன்று கலாச்சாரங்களுடன் பிணைக்கப்பட்டது. அவரின் வங்காள குடும்பம் இந்து, முஸ்லீம், ஆங்கில நாகரிகத்தை உள்ளடக்கியது. தாகூரின் தாத்தா துவாரகநாத் அரபி, பாரசீக மொழிகளில் புலமைப்பெற்றவர். தாகூருக்கு சமஸ்கிருதம், இஸ்லாம், பாரசீக இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானமிருந்தது. இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மூன்று மதங்களும் தாகூரை மாறுபட்ட மனிதராக உருவாக்கியது. அதனால்தான் அவரின் சிந்தனையும் மாறுபட்ட யதார்த்தவாத படைப்புகளாக விளங்கியது.

தாகூர் உலகின் சிறந்த கவிஞர் மட்டுமல்ல. மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர், இசையமைப்பாளர், சிறந்த ஓவியர், என பன்முகத் தன்மையுடையவர். அவரின் படைப்புகளில் இலக்கியம், அரசியல், கலாச்சாரம், சமூக மாற்றம், மத நம்பிக்கை, தத்துவம், சர்வதேச விவகாரம் ஆகிய பல அம்சங்களும் பொதிந்திருக்கும். அதனால்தான் தாகூரின் சிந்தனைகள் இந்திய துணைக் கண்டத்தில் முதல் அரை நூற்றாண்டுக் காலம் ஆளுமை செலுத்தியது.  

தாகூரும் காந்தியும் நல்ல நண்பர்கள். என்றாலும் பல்வேறு கருத்துகளில் தாகூர் காந்தியிடமிருந்து மாறுப்பட்டார். குறிப்பாக தேசியம், நாட்டுப்பற்று, கலாச்சார மாற்றம், அறிவியல் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் இருவருக்கிடையே வேறுபாடுகள் இருந்தன. காந்தியின் கருத்துகளில் பழமைவாதம் அதிகமிருக்கும். ஆனால் தாகூரின் கருத்துகளில் அறிவியல் பூர்வமான விளக்கமிருக்கும். காந்தியின் பல கருத்துகளை கடும் விமர்சனம் செய்துள்ளார் தாகூர். இந்தியாவுக்கு சிறந்த தலைமையை காந்தி வழங்கவில்லை என்றே தாகூர் கருதினார். என்றபோதிலும் காந்தியை முதன் முதலாக மகாத்மா (பெரிய ஆத்மா) என அழைத்தவர் தாகூர்தான்.  இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகப்பெரிய வேறுபாடுக் கொண்டது. காந்தி தனது தாம்பத்ய வாழ்க்கையை பகிரங்கமாக ( காந்தி எழுதிய சத்தியசோதனை என்ற நூலிலில்) எழுதினார். ஆனால் தாகூரோ "தாம்பத்திய வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது பெண்ணியத்தை கேலிலி செய்வதாகும்' என எழுதினார். எனினும் தாகூரின் வாழ்க்கை இனிமையாக இருக்கவில்லை, சோகமானது. தாகூர் 1883-இல் திருமணம் செய்துகொண்டார். அவரின் மனைவி மிருனாலி தேவி 1902-இல் இறந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தாகூருக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தனர். அவர் மீது மிகுந்த அன்பை செலுத்தினர். நீண்ட விவாதங்கள் (குறிப்பாக விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் மனைவி அபலாபோஸ் போன்று) செய்தனர். ஆனால் அவை அனைத்தும் கருத்து பறிமாற்றங்களை தாண்டி செல்லவில்லை.

1930-இல் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ரவீந்திரநாத் தாகூரும் உரையாடியது, அன்றைய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. அதில் உண்மை எந்த அளவுக்கு கருத்துகளிலும் அறிவியலிலும் பிரதிபலிக்கிறது' என்பதை கூறியிருந்தார். அந்த நேர்காணலில் ஐன்ஸ்டைன் தாகூரின் தத்துவ கருத்துகளை புகழ்ந்திருப்பதை பார்க்கலாம்.



தாகூர் தேசியத்திற்கு எதிரான கொள்கையையே கொண்டிருந்தார். "இந்திய துணைக்கண்டத்தில் இந்து, முஸ்லீம், கிருத்துவம், சீக்கியம் என அனைத்து மதங்களும் இருக்கும்போது, இந்து தேசியம் என்பது மோசமான கொள்கை' என்றார். ஆனால் காந்தியோ இதற்கு நேர் எதிராக தேசியத்தை ஆதரித்தார். அவரின் ராமராஜ்யம் போன்ற வார்த்தைகள் இந்து தேசியத்தை முன்னிறுத்தியது.

தாகூரின் குடும்பம் ஆங்கிலேயரிடம் நட்புடன் இருந்துள்ளது. என்றபோதிலும் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தாகூர் உறுதியுடன் இருந்தார். 1905-இல் கர்சன் பிரபுவால் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது தாகூர் பல இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக பேசினார். தாகூரின் பாடல்கள் வங்காள வீதிகளில் பாடப்பட்டது. அதேபோல 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி ஆங்கில ராணுவம் அமைதியான பொதுமக்கள் கூட்டத்தின் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் 379 பேர் இறந்தனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனது கடும் கண்டத்தை தெரிவித்து ஐந்து கடிதங்களை அன்றைய வைசிராய்க்கு எழுதி    னார் தாகூர். தனக்கு ஆங்கில அரசு வழங்கிய "நைட்வுட்'  (Knight wood) பட்டத்தை திருப்பி அனுப்பினார்.

இந்தியா விடுதலையடைந்தவுடன், தாகூர் எழுதிய "ஜன கன மன அபிநாயக' என்ற பாடல் தேசியக் கீதமாக்கப்பட்டது. அதேபோல வங்காளதேசம் என்ற புதிய நாடு, தாகூர் எழுதிய "அமர் சொனார் பங்களா' என்ற பாடல் தேசியக்கீதமாக்கிக்கொண்டது. உலகில் இதுவரை இரண்டு மாறுபட்ட தேசங்களுக்கு தேசியகீதம் இயற்றிய பெருமை இரவீந்திரநாத் தாகூருக்கு தவிர வேறுயாருக்குமில்லை.

இரவீந்திரநாத் தாகூரின் கல்வித்திட்டம் இன்றும் அற்புதமானவை. அவர் வெறும் ஆரம்பக்கல்வி பற்றி மட்டுமே பேசவில்லை. பள்ளி என்பது மாணவர்கள் நேசிக்கும் மகிழ்வான இடமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர். செயற்கைத்தனமான பள்ளிகளையும் கல்வி முறைகளையும் கண்டித்தார். இயற்கையான பள்ளிச் சூழலை பற்றி பேசினார். எப்படி பள்ளியை உருவாக்குவது, குழந்தைகளை எப்படி கவருவது, அவர்களை எப்படி மிகச் சிறந்த மதிநுட்பம் கொண்டவர்களாக தயார்செய்வது என விரிவாக எழுதினார். ஏட்டில் மட்டுமல்லாமல் அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்.  சாந்திநிகேதனில் சாதித்துக் காட்டினார். தனது வாழ்கையில் அதிக நாட்கள் சாந்திநிகேதன் பள்ளியை முன்னேற்றுவதிலேயே கழித்தார். அவரின் நோபல் பரிசு  நிதி முழுவதையும் சாந்திநிகேதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார். கட்டணமில்லாத இலவசக் கல்வியை போதித்தார். ஆங்கில அரசிடமிருந்து எவ்வித நிதி யுதவியையும் பெறவில்லை. சில தனிபட்ட நபர்கள், அவரது நண்பர்கள் மற்றும் காந்தி போன்றோர் நிதி யுதவி செய்தனர்.

தாகூர் விரும்பிய கல்வியானது அறிவியல், இலக்கியம், கலை, மனிதவளம் சார்ந்ததாக இருந்தது. அதன்படியே சாந்திநிகேதனில் கல்வியை போதித்தார். இந்திய கலாச்சாரம், வங்காளம் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் போதிக்கப்பட்டன. சாந்திநிகேதனின் மாணவர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சாந்திநிகேதனில்தான். தாகூர் எனக்கு "அமர்த்தியா சென்'  (அழிவில்லாதவன்) என பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல் கல்வி போதித்த ஆசிரியர். அந்த பள்ளி பல வகையில் மறு பட்டது. வகுப்புகள் எப்போதும் வெட்டவெளியில்தான் நடக்கும். அப்போதுதான் இயற்கையை ரசிக்க முடியும்; அமைதி நிலவும். பள்ளியில் தேர்வு நடைபெறாது. ஆனால், அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவை இந்திய கலாச்சாரம் தொடங்கி மேற்கத்திய சிந்தனைகளுக்கு பிறகு, சீனா அல்லது ஜப்பான் கலைகளில் முடியும்.

அதேபோல தாகூரின் கலாச்சார சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றை சத்யஜித்ரேயின் படங்களில் பார்க்கலாம். சத்யஜித்ரேயும் சாந்திநிகேதனில் பயின்றவர். அவரின் பல படங்கள் தாகூரின் கதைகளின் அடிப்படையில் உருவானவை. இதை பற்றி 1991-இல் சத்யஜித்ரே, ""சாந்திநிகேதனில் மூன்று வருடங்கள் கழித்தது என்னுடைய வாழ்வில் உன்னதமான காலங்கள். அது என்னுடைய கண்களை முதல் முறையாக திறந்தது. இந்தியா மற்றும் கிழக்காசிய கலைகளை கற்றுத் தந்தது. அங்கு மேற்கத்திய கலை, இசை மற்றும் இலக்கியம் கற்றுக்கொண்டேன். சாந்தி நிகேதன் கலையையும் இசையையும் என்னுள் விதைத்தது''  என்றார். இதேபோலதான் ஜவஹர்லால் நேரு தனது "தி டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலிலில் சாந்திநிகேதனை பற்றி சிறப்பாக எழுதியிருப்பார். அதோடு நில்லாமல் தனது மகள் இந்திரா பிரியதர்ஷினியை சாந்திநிகேதனில் (1934- 35) கல்வி பயில அனுமதித்தார். ரவீந்திரநாத் தாகூர்தான் இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி (அமைதியான பார்வை) என பெயர் சூட்டினார்.
சுருக்கமாக சொன்னால், இரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் மிக சிறந்த தீர்க்கதரிசி ஆவார். இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுவரும் சிந்தனைகளை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே வலியுறுத்தி வந்தவர். குறிப்பாக, இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்ணியம் காத்தல், தீண்டாமை என்ற இழிவை நீக்குதல், மத சார்பின்மை, அறிவியல் வளர்ச்சி, மனித நேயத்தை பேணிகாத்தல் ஆகியவை தாகூர் சிந்தனைகளின் சாரமாகும். இவை என்றைக்கும் மனித குல முன்னேற்றத்திற்கான ஆதாரங்களாக உள்ளன.





Sonntag, 11. Dezember 2011

எளிமையான சில குறிப்புகள்

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பருத்த வயிறு குறையும்.

இஞ்சிச் சாறை கொதிக்க வைத்து அதே அளவு தேன் ஊற்றி ஆற வைத்து தினசரி காலையிலும், மாலையிலும் உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிற்றைக் குறைக்கலாம்.
வாழைப்பூவை தினமும் கூட்டாக செய்து சாப்பிட்டு வர உடல் ஊட்டமாகும் வயிற்றுப்புண் குணமாகும்.

வில்வ மர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.

வெற்றிலை, ஒமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்று பொறுமல் குணமாகும்.

வில்வபழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட குடலில் கசடு தங்காமல் சுத்தமாகும்.

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மணத்தக்காளி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் குணமாகும்.

பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

மாங்கொட்டைப் பருப்பை நன்றாக காய வைத்து தூள் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட பூச்சிகள் மறையும்.

தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து தயிறுடன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்டால் எல்லா வகையான வயிற்றுப் போக்கும் குணமாகும்.


எலுமிச்சம்பழத்தை உடல் முழுவதும் தேய்த்து கொஞ்சம் நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.


முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான சில குறிப்புகள்





* சந்தனப்பவுடருடன் பன்னீர், கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு இரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.





புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மா போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும் .



பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து அதை அரைத்து மாவாக்கி பெஸ்ட் போல் பயன்படுத்தலாம் இவ்வறு ச்ய்தால் முகம் சுருக்கம் நீங்கும் முக பொலிவும் பெறும்.





* "ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.





*அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். ..

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பப்பாசி மர இலை பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பப்பாசி மர இழையின் சாற்றையும், தேனையும் கலந்து நோயாளிகளுக்குப் பருகக் கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெலிப்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலையைச் சேர்ந்த டொக்டர் ஏ.எஸ்.எம். அமீன் என்ற மருத்துவரே இவ்வாறு டெங்கு நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார்.

இந்த முறையில் 20 நோயாளிகளை தாம் குணப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பாசி மர இலையினால் டெங்கு நோயை தீர்க்க முடியுமா என்ற விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அளிக்க முடியாதென மாத்தறை பொது வைத்தியசாலையில் மருத்துவர் டொக்டர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

எனினும், பப்பாசி இலையை சாறு பிழிந்து அருந்தக் கொடுப்பதனால் பக்க விளைவுகள் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயினால் இரத்தத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை பப்பாசி இலைச்சாறு தீர்க்கக் கூடியதென மற்றுமொரு ஆயுர்வேத மருத்துவரும் தெரிவித்துள்ளார்.

நன்றி பாரதி க்கு நன்றி

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும்.

மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!



நன்றி  பாரதி க்கு நன்றி

தாவரத்துக்கு கூட உயிர்ப்பு உண்டு மனிதா !!!!!!!!!!!!!! உனக்கு மட்டும் ஏன் இல்லை சிலிர்ப்பு

வெறும் வைக்கோல்  கன்றுக்கும் சுரக்கும் தாயின் பால் ...
நிஜமான கன்றை கண்டால் சுரக்காதோ ?
கடிதங்களை திருமுகமாய்
தபால் காரனை  தெய்வ தூதராய்............
எத்தனை  தாய்மைகள் ....
தெருவோரத்தில்



சீதளத் தென்றலில்
குளிரும் பனியில்..
குலவிடப் பெண்டிருமாய்  கும்மாளம் போடுகின்ற கன்றுகள்


இரு கணம் ....
சிந்தித்தால் .....
எத்தனை ரண வேதனைகள்
எளிமையாகும்
 -தாய்மையின்
ஏழ்மை யும் நீங்கும்

வாழ் வாதாரம் நீ என்று ...
வாழ்ந்து விடு
வாழ் வில்  தாழ் வாரம் ஆகி விடாதே

தாவரத்துக்கு  கூட  உயிர்ப்பு உண்டு
மனிதா !!!!!!!!!!!!!!
உனக்கு மட்டும் ஏன் இல்லை  சிலிர்ப்பு

Freitag, 9. Dezember 2011

நான் என்ன விதி விலக்கா? தீப்பெட்டி முத்தம் பெரு நெருப்பை மூட்டுதல் போல்


காற்றின் தழுவலும்   வண்டினத்தின் முகவுரையும்
ஏற்றமிகு என் மனதில்
அவளின் ஏக்கம்

சேற்றில் வளரும் தாமரையா? அவள்

சீற்றமிகு கடலின்  இதமான  தடவல்கள்
ஈரமான  குறு மணலை ...சுதி ஏத்தும் காட்சிகள்
ஆழமாய்   மனதில் குறு குறுக்கும்

காற்றின் தழுவலில் தனை மறந்து
கை விளக்கு
சுடரோ  துயில் கொள்ளும் .

நாற்ருக்களோ  தலை குனியும்

முந்தானை  சேலை  சிலிர்க்க  வைக்கும்

அம்மட்டோ ?
இல்லை இல்லை



முந்தானை அசைவதால் .வெண் பனி சங்குகளின்
பரிணாமம்
இந்தா! இந்தா!!    என கை அசைக்கும்


நான்  என்ன  விதி விலக்கா?  
தீப்பெட்டி முத்தம் பெரு நெருப்பை
மூட்டுதல் போல்

உணர்சிகள் மனதில் விரகமாய்  வெடிக்க
நான் விட்ட
ஏக்க மூச்சின்  காற்றுக்கள்
அனல் காற்றாய்
எரிமலையாய்
என்று தான்  உன் கன்னத்தை
தீண்டுமோ?
துணிந்து

Mittwoch, 7. Dezember 2011

தினவெடுத்தால் ..உடம்புக்கு தீனி போட ..அறம் மீறி போகாதே !

ஆற்றோடு  கோபித்து 
அடியது கழுவாது
நாற்றமெடுக்கும் மனிதராய்
நலிவதென் !  நம் சமூகம் ?

கதையும் கற்பனையும்
களவும் கடும் சொல்லும்
இழிவாய்ப் பேசும் ........
ஈனமான  வன் குணமும் 

காட்டி  கொடுப்பும் ,
கடும் சூதும் வாதும்
ஏட்டிக்கு  போட்டியாய் ,இன்னும் பல -
குரோதமாம் குணம் அனைத்தும்
சதையும்  இரத்தமுமாய்
 உருவான  மிருகமதாய்
வாழ் கிறாய் மனிதன் என .........
சீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாற்றான் தொட்டது    தன மனைவி -இதை
மனம் ஆற்றாது நீ செய்தால் ?
துரோகமன்றோ?

பூவிழி மாந்தர் ,நம் பெண்டிர்
கோல மயில் போன்ற   ,
தோகை கொள்  ஆரணங்கு  -அவள்
அழகு தன்னில் நீ மயங்கி ..

கள்ளத்தனம்  கொண்டு - தினம் 
கரும் பனையின் கள்ளை ருசித்தவராய்
கதி கலங்கி  ...மதி மயங்கி
மாறு உரைத்தல்
அன்றேல் வைதல்
 கொடுமை அன்றோ?

மனிதனே ! நீ தமிழன் என்றால்
அமிழ்து   என்னும்  நம் தமிழன்  புகழ் பாடு !!!!!!!!!

செந் தமிழின்  புகழ் தன்னை
சேவித்து, உன் சென்னி தன்னில்
குட்டிகொள்

வையாதே  மாந்தர் தன்னை
வரம்பு  மீறி  போகாதே


தினவெடுத்தால் ..உடம்புக்கு
தீனி போட  ..அறம் மீறி  போகாதே !


நில் ! கவனி ! செல் !!!
தூரமல்ல   ..அர நெறிகள் .

எம் அரன் தந்த   வேதங்கள்
பொய்யல்ல ...................
வாழ் வின்,  வழி  முறைகள் .


இதை பின் பற்றி நீ  சென்றால்
இது வே   நமக்கு  அரண் ஆகும்


இதமான   எண்ணத்துடன் ,இனிது வாழ
தமிழ் அற நூல்கள் கற்போம்

தமிழ்  தேசியத்தை காப்போம்
நிமிர்ந்து

நீ எப்போ உணர்வது .... காலதேவனின் கையில் காலத்தின் விதி என்று


வற்றாத நதியாக ஓடட்டும்
பாசமெனும் உன் நினைவோட்டம்..

அதில் வாழத்துடிக்கும் மனதில்
மீனாட்டம் துடிக்கும் இதயம்..........
..
அலை அடிக்கும் !
ஏன் ? புயல் கூட சாமிரம் வீசும்

வெம்மி த் தணியும் மார்பு
ஏக்கத்தில் உன் நினைவாய் !!!!!!!!

சாகத் துடிக்கும் மீனாய்
உன் அன்பெனும் வலையில் சிக்குண்டு நான் .........
.

கரையேறும் படகுக்கு சாதகமாய்
அலைகள் கூட என்னை உன்னுடன் உந்தும்

வலைக்கும் மீனுக்கும் காதலா ?

கடலில் உப்பு எப்படி விளையும் ?
நாம் அழுத கண்ணீர் என்று
யாருக்கு இது புரியும் ?

நினைத்தா பார்த்தோம் ?
என்னை விட்டு நீ வெகு தூரம் செல்வாய் என்று

வழி போக்கர் சொல்வது என் காதில் விழுந்தது
இப்போ இவனொரு குடிகாரன் என்று ......

உன்னை மறக்க நினைத்து
நான் என்னை மறந்து நாளாயிற்று
என்பது கூட எனக்கு மறந்து போகிறது

வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே

நீ எப்போ உணர்வது ....
காலதேவனின் கையில்
காலத்தின் விதி என்று

Sonntag, 20. November 2011

என்னே ! எம் விதி ! தமிழா

என்னே !   எம் விதி !  தமிழா
கொஞ்சும் மொழி  தேன் தமிழ் -அமிழ்தே எம் மொழி
ஊனை வருத்தி ,உயிர் வருத்தி
உலகம் பரவிய ஒரே இனம்
தானை நடத்தி  தாரணி காத்த
 தமிழ் தாய்   பெற்ற மைந்தர் நாம் !
-இன்று வீணே   பொழுதை  வீணாக்கும்
அற்ப வீணராய் நாம் வாழ் வதுமேன்?



போட்டி  பொறாண்மை வஞ்சகங்கள்
தமிழன் வாழும் காலமாய்  தொடர்கிறதே !
பதில்  காணும் திறமை நாம் இழந்து
நாட்கள்  கடந்து யுகமாச்சு !
பிழைக்கும் நாட்டில்  போட்டிகளும்
உழைக்கும்  பொழுதிலும் தொடர்வது மேன்?


 மழைக்கு ஒதுங்கும் உயிரினங்கள்
ஒற்றுமையாக  வாழுது காண்!
நம் மினம்   இன்று தலைக்கும்
  கதிரைக்கும் போட்டி இட்டு
நடுத்தெருவில் நிக்குது பார் !


மண்ணுக்கும் பெண்ணுக்க்ம்
 போட்டி இட்டு
பொன்னுக்காக  குலமதனை,
    அழிக்கும்  -கோடரி
ஆனதுமேன் .?


-உலகில்
இருக்கும் பொழுதில் நாம் வல்லவர்கள்
இறக்கும் பொழுதில்   என்ன மிச்சம்


காட்டி கொடுக்கும் இனமதுவாய் ,.கயமை கொண்ட பேரினமாய்
ஊட்டி வளர்த்த தாய்தனை யே!
 கூட்டி கொடுக்கும் கயமையைபோல் .



நாட்டில் கிடக்கும்  பிரச்னைக்கு
 -நாமே நமக்குள்  எதிரிகளாய்
மானம் துறந்து ,மதி கெட்டு
,வீணர்களாய் தமிழ் துரோகிகளாய் -உலகில்  கொடு
அவுணர் களாக   மனதில் மாறி விட்டோம்


ஊனை பெருக்கி  உயிர் வளர்க்க
 எச்சில் கலை நாய்களாக
மாறிவிட்டோம்


விண்ணில் ஒளிரும் சூரியனும்,,,,,  மறைந்து போக நேரிடுனும்
கண்ணில் ஒளிகொண்டு  காவியங்கள் ,,,,,,படைக்கும் தமிழர் நாம் அன்றோ !

பெண்ணின் மானம் பெரிதென்று ,,
,உலகுக்கு நல வழி காட்டியவர்கள்
உண்ண உறங்க  வாழ்ந்த இடம்
  உயர்வு காண   ,,உழைப்பதனை
 உலகுக்கு  கோடிட்டு  காட்டியவர்கள்
வண்ண மயமாய் அணிகலனை
மயக்கும் மங்கைக்கு அணி வித்து
ஆடல்  பாடல் கலை என்று
 உலகை அரசோச்சி  அன்பால் வளர்த்தவர்கள்

போரில்  மறவர் தமிழன்  என்றார்
ஏரில்  உழைப்பில் தமிழன் என்றார்
கூடி வாழும் இனம் என்றால் 
குவலயத்தில் நம் இனம் தான் என்றார்
பேடு களாக நாம் பிறக்கவில்லை -என்று பல
ஏடு  களில்   இலக்கியம் தாம் வரைந்தார்


நாடு போற்றும் உத்தமர்கள்
இன்று நலிந்து   கூழைகும்பிடு போடுகின்றார்
தொன்று தொட்டு வளரும்  எட்டப்பரும்
கூடி கெடுக்கும்  காக்கை வன்னியரும்
சோடி சேர்ந்து  உழைக்கின்றார் ..
சோதனைகள் எமக்கு நிதம் கொடுக்கின்றார்



நாவின் நுனியில்   இனிமை களும்
மனதின் அடியில் வஞ்சகமும்
போட்டி பொறாண்மை கொண்டங்கே
பெயரில் தமிழனாய் வாழாதே


வாழும் காலை  பூமி தன்னில்
மற்றவர் காலை வாராதே
தோழை கொடுத்து  தூக்கி விடு
அவன் யாரி என்றால் 
நேரில் மோதிவிடு


வருகின்ற காலம் நமக்கெனவே
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ
தேடுங்கள் அன்பை மாந்தரிடை -அதனால்
ஒளிமயமே 
எம்மிடை

Sonntag, 13. November 2011

அம மிதியை மிதித்து அரும் தேதி பார்த்து

உண்மைகள் தங்கங்கள் போன்றவை - நீ
எத்தனை முறை தீயில் திருப்பி திருப்பி
புடம் போட்டாலும்
தரமும் குறையாது .........
நிறமும் மாறாது .........
என்கிறாய் நீ
சுட்டால் தானே ஜொலிக்கும் .
வேதனையின் பின் வரும் மகிழ்ச்சி போல
வலியுடன் சேர்ந்த பிரசவம் போல

பட்டால் வரும் அறிவும்
-பொன்னை சுட்டால் வரும்
ஒளிர்வும்
பெண்ணே உனக்கு அணிகலனே !!!!!!!!!!!
கண்ணே என உனக்கு ..
உன் காதலன் தந்த பொற் தாலி கூறும் கதை என்ன?

சீராளன் உன் கணவன்
தாராளமாய் தந்த தாலி
முள் வேலி என்னும் சிறையல்ல

புடம் இட்ட தங்கம் போல்
புதுப் பொலிவாய்
ஜொலி பெண்ணே !

என் வாழ்வின் அர்த்தங்கள்
உன் வாழ்வின் வசந்தங்கள் அத்தனையும் உன் காலடியில்
தந்தேன் எனக் கரம் பற்ற முன்னம் உன் கால் பற்றி
வாழ்வின் முன் அகலிகை போல்
தவறு செய்து நீ இருந்தால் ..
முப்பத்து முக்கோடி தேவர் முன்
மண்டபத்து பெரியோர் முன்

அம மிதியை மிதித்து
அரும் தேதி பார்த்து
இத்தினத்தில் இல்லறமாம்
நல்லறம்
புகுவோம்
வா பெண்ணே என அழைப்பான்
 
இப்போ சுட்ட பொன்னாய்
தங்கமாய் ஒளிர்பவள்
நீ தானே
வாழ்க நலமுடன்
----------------ஸ்ரீ ராஜா

Mittwoch, 2. November 2011

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம்

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.
செம்பருத்திப்பூ
மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.
ஆவாரம்பூ
காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.
மாம்பூ
மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும்.
நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.
துளசி இலை
சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.
கொத்தமல்லி தழை
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்
புதினா இலை
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்
கொய்யா இலை
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்

Mittwoch, 19. Oktober 2011

என்னுடையதல்ல

சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
 சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
 செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
 இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Montag, 17. Oktober 2011

மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை தொடர்கிறது என்றோ ஒரு நாள் நனவாகும் என்னும் நம்பிக்கையில்

அன்பே !அன்பே !
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
என்கிறாயே


நீ காட்டும் எட்டுத்திசையும்
தறிகெட்டு அலைந்து விட்டேன்
ஒரு முறையேனும் உன் மார்பை சுட்டிகாட்டி சொல்லு
உன் இதயத்தில் நான் இல்லை என்று

பல முறை பிறந்தாலும்
என் மார்பில் நீ தூங்கும் காலம் வரும்
என்ற என் நம்பிக்கையின் ஒளிக்கீற்று
என் மூச்சை உயிர் பிக்கிறது


கனவின் நீளம்
கண் விழித்ததும் முடிவடையும்
என்கிறாயா?

பேதை பெண்ணே
நினைவெல்லாம் நீ தானே
என் நனவே கனவாக
மாற்றியவள் நீ என்பதால்
என் நினைவின் நீளம் உன்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்


ஒவ்வொரு வாழ்வின் முடிவெல்லை
மரணமாக இருக்கலாம் ,
ஆனால் அன்பை வென்றவர்கள்
இதயத்தில் வாழ்வார்கள்

உடல்கள் அழிக்கப்படலாம்
கண்ட உண்மைகள்
நனவாக தொடர்ந்து வரும்

ஒவ்வொரு மரணத்தின்
முதல் எல்லை
வாழ்வாக இருந்ததில்லை....
என்று சொல்பவர்கள் உணருங்கள்

பிறக்கும் மனிதன் பிணமாக பிறந்து
ஜனனிக்கும் பொழுது
அம்மா என அழுது
பூமியில் மனிதனாக
அடையாளம் பெறுகிறான்

அதன் பின் கனவும் நனவும்
வாழ்வின் போராட்டமாக
மாற
மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை
தொடர்கிறது
என்றோ ஒரு நாள் நனவாகும்
என்னும் நம்பிக்கையில்


நீ விட்ட மூச்சு தானே என் சுவாசம் என்றான பின்பும் கூட எமக்குள் பிரிவு ?

பெண்ணே நில் நான் இழந்தது
உன் அன்பைத்தானே
இருந்தும் சிதைந்தது என்ன ? எங்கள் அமைதிதானே
..
நீ விட்ட மூச்சு தானே
என் சுவாசம் என்றான பின்பும்
கூட எமக்குள் பிரிவு ?
ஆச்சரியம் !!!!!!!!!

நுரஜீரல்ம் காற்றும் ஒட்ட வில்லை
மனிதர் வாழ ஏது வாகிறதே!!!!!!!!!!!!!!

உன் இதயம் சொல்வதை கேள்
மற்றவர் சொல்வதை உன் மனதில் இட்டு அலசு
என் மனதில் அன்பெனும் உளிகளால்
உன்னையே
இருதயத்தில் சிலையாய் வடித்தவளே
எப்போதும் உன்சிந்தனை நினைவுகள்
என்னை உயிரோடு தூக்கில் இடுகின்றனவே

துரத்தும் உன் நினைவுகள்
இதயத்தின் இயக்க மாய் ..
என்னை கொல்கிறதே
அன்பே !
அந்நேரம் உனக்குள் நான் தொலைந்து
போ னதை மீண்டும்
நினைவு படுத்தும் .


தூக்கத்தில் இருக்கும் உன் மனது
என்று தான் விழிக்குமோ ?
அது வரையில் தடம் புரளா
உன் அன்பெனும் தண்டவாளத்தில்
ரயிலாக நான்

Sonntag, 2. Oktober 2011

வாழ்கின்ற வாழ்வில் -நீ என் மூல தனம் வாடுகின்ற இவ் வேழைக்கு-நீ நந்தவனம் காட்டாதே எனக்கு நீ கள்ளத்தனம்



என்றோ ஒரு நாள் எனக்காக
உன் உதடு சொல்லும் ஒரு வார்த்தைக்காய்
நம்பிக்கையின் ஒளியில் அந்தரிக்கும்
ஜீவனாய் நான்



வான் மதியாய்  என் வாழ்வில்
ஒளியேற்ற  வா என்றேன்


நீயோ என்னை பழிவாங்க
அமாவாசை யாய் இருண்டு அட்டமி நவமி யாய்
தேய்ந்து வளர்ந்து  பூரணையாய்
  வதன நிலவாய்
ஒளிகாட்டி இருள் காட்டி 
நின்  மதியை
ஏனோ பறிக்கிறாய்?


கூடு கட்டும்
குருவிக்கும் பேடு உண்டு
குலவுகின்ற அன்றிலுக்கும் சோடி உண்டு
கொடிமலரே எனக்கென்று  என்ன உண்டு????????????


பாடுகின்ற  குயில்கள் எல்லாம்  கீதம் பாட
தேடுகின்றேன் உந்தனை நான்
தோழியாக !


கூடு விட்டு  ஆவி தான் போயிடினும்
குலமகளே
நீ தானே  எந்தனது
 இதய ராணி

ஆடுகின்ற  ஆட்டம் எல்லாம்
வாழ்க்கை அல்ல
தேடுகின்ற  சுகம் எல்லாம்
 சொர்க்கம் அல்ல


மாடு போல் உழைத்தாலும்
வையகத்தில்
 மகிழ்ந்து வாழ  உறவொண்டு
 வேணுமடி


திகட்டாத  தேன் சுவைகள்
 இல்லறத்தில்
தினம் தினமாய்  குலவி நாங்கள்
மகிழ்ச்சி காண்போம்

பகட்டான  வாழ்க்கையில்
எந்த பண்பும் இல்லை
தெவிட்டாத  இன்பம் உண்டு 
 குடும்பமதில்


வாழ்கின்ற வாழ்வில் -நீ
என் மூல தனம்
வாடுகின்ற  இவ் வேழைக்கு-நீ
நந்தவனம்
காட்டாதே எனக்கு நீ
கள்ளத்தனம்


தென்றலின்  சிணுங்கல்கள் ,முத்தத்தின் சூடுகளில்
நான் தவிக்க.....................
 ,சிங்காரம்  செய்யும் வண்டுகளின் ரீங்காரம்
நெடிதான வேப்பமரக் காற்றின்  இதமான  அரவணைப்பு
இவையாவும் ?????????
கண்ணே நீ எனை பிரிந்த நாட்களின்
ஏமாற்றங்களின்  தனிமை என்னை தீ மூட்ட 


என் இதயம் கவர்
வடி வழகே ஓடி வா
நாம் மகிழ்ந்து வாழ்ந்து -உயிரான காதலுக்கு
முடியை சூட்ட ...................

Dienstag, 20. September 2011

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றமுடன் வாழ்வோம் இனி நாம்-இளமை காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன் கருத்தொருமித்து வா

ஒரு நிமிடம்  ஆவது
உன்னை  என் விழிகளால் அளக்க ....
உன் முகத்திரை ஊடே  புகுந்து
 இதயத்தில் வாழ ............


காதலி என் காதலி
 போதையின் சூட்டிலே
  நான்  மன்மதன் ஆக


ஆம் என்றொரு வார்த்தை
 உன்னிடமிருந்து
வருமா? வருமா?   என் முகம்நோக்கி


திரை கடல்  ஓடி நான்  திரவியம் தேடினேன்
நரை  திரை வரு முன்  வாலிபக் கரை  ஏறவேண்டி
உனதன்பை நாடி
உறவுகள் துறந்து
உன் பெயர் எழுதியே   என் விரல்கள்  தேய்ந்து
உன் ஓரப் பார்வையில் வாழ்வையே தொலைத்து
நடை பிணமாகி
உன் பின்னே  வருகிறேன்


நீ விட்ட  மூச்சை என் சுவாசமாக்கி
வாழ்வின் இறுதியை உன்னோடு  சேர்ந்து
  வாழவே  துடிக்கிறேன்


நீ சொன்ன  வார்த்தைகள்
மனத்தில்  ரணமாய்
மரணத்தை   நோக்கி  தூண்டி நின்றாலும் -என்
மௌனத்தின்  மொழிகளை 
உன் பார்வையில் விட்டு
நம்பிக்கை , மனதின் ஊன்று கோலாய்
நிமிர்ந்து  உன்னை  நோக்குவேன்
காதல் யாசகனாய் !!!!!!!!!!!


உன் பெயரை உச்சரிக்கும் பொழுதில்
உவகையால் மனமது  துள்ளி துடித்து
நன்றே உலகத்தில்  வாழ்  என்று  சொல்லும்

பசு
கன்றே  ஆகினேன்
காதலி நீ எனக்கு தாய்ப் பசு ஆகுவையோ ?

இன்றே எனக்கொரு ஆறுதலாய்  -உன்
இன்முகம் காட்டுவாயோ ?

முன்னே  எமக்கு  பூர்வீகத்  தொடர்போ ?
முத்தமிழே  ,கொடி மலரே .,வெண் கமல
ராணியே  சற்றே  எனக்கு
  உன் மனம் எனும் அரியணையில்
என் காதலை   ஏற்க்காயோ ?


சுற்றே வல் புரியும் உன் சேவகன்
ஆகி நான்  உன் காலடி கிடப்பேனே 

என் காதலை  வர்ணிக்க வார்த்தையே  இலையே
என் பிரியமான தோழியே கேள் !

காதலன்  காதலி இருவர்
கருத்தொருமித்த  காதலும் கசக்குமோ சொல்?
பூதலம் மீது  புனிதமாய்  என் காதல்
அகதியாய் தவிக்கு து  பாராய் !

அடைக்கலம் கொடுத்து
என்னை அன்போடு  தூக்கி
உன் மார்போடு அனைத்து கொள்


இம் மேதினி மீதில் இன்சுகம் பெற்று
 இன்புற்று  வாழ்வோம்
விரைந்தோடி வா
 எந்தன் முன்


போற்றுவார் போற்றட்டும்   தூற்றுவார்  தூற்றட்டும்
ஏற்றமுடன் வாழ்வோம்   இனி நாம்-இளமை
காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன்
கருத்தொருமித்து வா

சிற்றின்ப வேளையில்  சிலுமிசங்கள் செய்து
பேரின்பம்  காணுவோம்  வா

Montag, 19. September 2011

மரத்து போன எண்ணங்களுடன் எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை யாசிக்கிறேன்


விட்டுக்க் கொடுப்புக்கள்
வெகுமதியானவையாம் - நீயும்
விட்டுக்கொடுத்துவிடு.....
என்று  நீ  இலகுவாய்   சொல்லிவிடலாம் .


உண்ணும்போதும்  உறங்கும் போதும்
கண் முன்  வரும்   விம்பமே !!!!!
சொல்வது  எவ்வளவு  எளிது
வீட்டு விடு  உயிரை   என்றால்  விட்டு விடவும்  தயார்

ஆனால்  எனது காதல்
அல்லவா அழிந்து விடும்
இறந்து போனஎன் உணர்வுக்கு
காணிக்கை  இல்லையடி


மரத்து போன எண்ணங்களுடன்
எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை  யாசிக்கிறேன்

பணமும் பகட்டும்  காதல் அல்ல
நிணமும்  சதையும் காதல் அல்ல
பாதைகள் தெரியாத  பயணியா? நான்
அன்றேல்  உன் பார்வையில் வெறும்
 சதை பிண்டங்களுக்கு துடிக்கும் பிராணியா?  யான்


 நீ இமைக்கும் போது எந்தன்
உள்ளத்தில்  பூ பூக்கும்
உன் கண்களின்  படபடப்பில்
என் தேகம்   சூடேறும்
உன்  உதடு வெடித்து வரும் புன்னகையில்
என் உணர்வுகளில்  போதை ஏறும்


முத்து ஒளித் தீபமே
போதை என்
நெஞ்சில்  ஏற்றும்
 தீபமே
 வானத்தின் ஒளிரும்
தாரகைகள்   கண்சிம்மிட்டி
  என்னை  நையாண்டி  செய்கிறதே

எங்கோ தெரு நாய்கள்  ஊளை  இட
இங்கோ அங்கோ என
 என் மனமும்   பந்தாகி தவிக்க
முற்றத்தில் குவித்த 
குறு மணலில்
குந்தி இருந்து  என வானத்து தேவதைஉன்னை
நிலவாய்   யாசித்து 
  உந்தனது  வருகை க்காய்
தினமும்  உன் நினைவுகளுடன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Freitag, 16. September 2011

உயிரே உன் மெளனம் எனை கொல்கிறது வாய்திறந்து ஒரு வார்த்தை பேசு.

உயிரே
உன் மெளனம்
எனை கொல்கிறது
வாய்திறந்து
ஒரு வார்த்தை பேசு...என்கிறாயா?

நானும்  நீயும் ஒன்றி இணைந்து
ஒருவர்  ஆனா  பின்பு 
வார்த்தைகளில்
பயன் இல்லையே
என்  செல்லம்!!!!!!!!!!!!!!


கணகளில் ஊடு புகுந்து
என் இதயத்தில்  துடிப்பது  உன் உயிர் தானே

என் உடலின் அசைவுக்கு அடி நாதம்  நீ  ஆன பின்பு
வருங்காலம் இன்பம்  என்று
நிகழ  காலம் கூறுவது
வார்த்தை  அல்ல

கட்டியம்    
புதிய கவிதை   புனையும்
விண் மதியே!!!

வருவாய்
உன் மதி வதனம்  மகிழ்ச்சி பொங்க

எனது  காதல்  தேசத்தில்  ஒருங்கிணைந்த  அன்றில்களாய்  பறப்போமா?
இப்பார்  எங்கும்

வா
 

Mittwoch, 14. September 2011

எனக்கோர் உயிராக ,மலரே கொடியே ,மதுரசமே -கமல தாமரையே ,வதன நிலவே ,அதிரசமே , உறவே ,உயிரே,

எண்ணம்  எனும்  ஆசைப்படகில் இன்பமாய் நீந்துபவளே -அன்பே
உன்னை நான்  நேரில்  காணும் நாள்  எந்நாளோ?
சின்னக் கதைகள்  பேசும்  செம்பவள வாய்  முத்தம்  நான்  தருவதும்  எந்நாளோ ?
பெண்மை  துள்ள  ஆண்மை உன்னை  வெல்ல -எம் பள்ளி அறை நாள் எந்நாளோ ?


எண்ணம்  அறிந்து இன்பசுகம் அளிக்கும் , வாயில் கனியமுதம்  தேன் சுவையாய் இனிக்க ,
விண்ணகத்து  தேவதை அரம்பாய் நீ மாறி , கண்ணா என்று எனை  அணைத்து,
தென்றல்  எனத் தழுவி,  கானகத்து மோனக் குயிலாய் -என்பைங்கிளியே
நண்ணியே  வாராயோ   சுகம் தனை  ஈயும் வதன  நிலவாய்



             
அமுது  ஊரும்  இதழ் களால் , என் உடம்பு காதலால்  கொண்ட நோயினை
ஒத்தி   வெப்பம்  தணிக்காயோ?
காணும்  போது  காதல் போதை தரும்  கண்களை  --நான்
நீ நாணம்  பொங்க  நான் பொத்தி விளையாட
,நீ சிணுங்கும் போது
மேலாடை சரிந்து  -உன்  அங்கங்கள்  தலை  ஆட்ட (காட்ட)
 ஆசை கொண்ட மோகத்தால்  உன்னை  சூடாக  நான் அணைத்து
தேகம் தேடும்  சுகமெல்லாம்   தேடி தேடி  நான்  தணிக்க

ஆகும்  நாள்  வரும்  வரைக்கும் . காத்திருப்பேன்  பைங்கிளியே!!!!!!!

தாயின்  கருணையும்  தந்தையின் அன்பும்
உன் வாயில்  ததும்பும்  வார்த்தைகளால் -மயங்கி
உன் காலடியில்  நான்  உறங்கும்  நாளை  எண்ணி
இந்த வருந்தும்  உயிருக்கு  காதலியே
-என்றும்  மருந்தாக
எனக்கோர்  உயிராக ,மலரே  கொடியே  ,மதுரசமே -கமல
தாமரையே ,வதன  நிலவே  ,அதிரசமே , உறவே ,உயிரே, கலைப்பெட்டகமே
உண்ணும்  உணவின்  அமுதமே -உன் திறந்த இதயக் கதவு தன்னை
அலங்காரக் கோதையே !,அரசாளும் இதய ராணியே ...
எனக்காக  என்னிடத்தில் தா.......ஸ்ரீ ராஜா

-

உன் மனம் தன்னை திருடிய வழிப்போக்கன் நான் எனில் பயம் தன்னை விடுத்து என் மார்பினில் சாய்ந்திடு

காந்தமாய் கண்கள்  காதலில்  பொங்கி
நீளமாய்           வெகு நீளமாய்  நீண்டு-
  உன் உருவினை விழுங்கும்

ஏக்கத்தில் உள்ளம்
  நினைவுகள் தடுமாறும்.

கூட்டத்தில்  போகும்  கூட்டத்தின் நடுவே
தவழும் நிலவே
 தாரகையே!!!!!!!!!!  உன் நினைவால் வெதும்பி உடலால்  உருகும்
ஏழையும் இவன் தான்

பார்க்கவும் அன்பாய் பழகவும்
ஜோடியாய் திரியும் அன்றிலாய்

குளிருக்குள்  இதம் சேர்க்கும்  யோடியாய்
வானத்தில் பறக்கின்ற
அன்பு வானம் பாடியாய்  வாழவே  வா

தேடிடும் அன்பும் தேக சுகமும்
கூடலும்  ஊடலும்
சுகந்தமாய் அணைப்பும்
பூதலம் மீது  புரிந்துனர்வாய்
  யோடியா சேர்ந்திட வா

ஆடிடும் அலைகள்
 காலடி அணைக்கும் கூதலின்

  நடுவே  குயிலினம் பாடும்
  காக்கையும்  கரையும்

பாடிடும்  அலையிலே
 பள்ளி  தான் கொள்ளும்

 மாயவன் சோடியாய்
 இணைந்திட வா

சேலையின் தலைப்பில்
 நெளிந்திடும் முந்தானை
வா என  அழைக்குதே  பார்

ஆடிடும் சேலையில்
பாதியே  விலகியே
 காட்டிடும் அழகை
கை கொண்டு மூடுது
 உன் கரும்
 தோகை அடி


நீ நடந்திடும் போது
அசைந்திடும் பிட்டங்கள்
 என்னை  நளினம் செய்வது
 அறிகுவையோ?

இத்தனை அழகுடன்  கூடிய
 யாரிந்த தேவதை?
என  அறிந்திட  ஆவலை
தூண்டிடவே
கை கொண்டு  தட்டினேன்
 உன்னை

அழைப்பது போல்
இங்கிதம்  தெரிந்ததால்
மெல்லெனக் கேட்டேன்
உனக்கு துணையாய்
வருவதற்கே

 வாழ்வது  நூறு தான்
மாழ்வதோ மண்ணில் தான்
ஆசையாய்  கேட்கிறேன்
கமலா  லட்சுமியே!!!!!!!!!!


எத்தனை துன்பங்கள் வந்தாலும்
 எத்துனை  எதிர்ப்புகள் வந்தாலும்
துணிந்தே  என் கரம்பற்று
  தாரகையே


பூமியில் மீதிலே தெம்மாங்கு பாடுவோம்
தீந்தமிழ் மொழியிலே  காவியம் பாடுவோம்
சீரிய புகழுடன் நீடூழி வாழுவோம்


உற்றவர் உறவினர்
 நண்பர்கள் விரோதியர்
அத்தனை உள்ளத்தின்
 ஆசியுடன்

அறம் சொல்லும்  வழியிலே
நல்லறம் சமைப்போம்


உன் மனம் தன்னை திருடிய
வழிப்போக்கன் நான் எனில்
பயம் தன்னை விடுத்து
என் மார்பினில் சாய்ந்திடு

தளர்ந்திடும் கால்களுக்கு
 உறுதியாய் நீ சொல்லு
மன்னவன் வருகின்றான்
பின்னால்  என்று