Mittwoch, 7. Dezember 2011

தினவெடுத்தால் ..உடம்புக்கு தீனி போட ..அறம் மீறி போகாதே !

ஆற்றோடு  கோபித்து 
அடியது கழுவாது
நாற்றமெடுக்கும் மனிதராய்
நலிவதென் !  நம் சமூகம் ?

கதையும் கற்பனையும்
களவும் கடும் சொல்லும்
இழிவாய்ப் பேசும் ........
ஈனமான  வன் குணமும் 

காட்டி  கொடுப்பும் ,
கடும் சூதும் வாதும்
ஏட்டிக்கு  போட்டியாய் ,இன்னும் பல -
குரோதமாம் குணம் அனைத்தும்
சதையும்  இரத்தமுமாய்
 உருவான  மிருகமதாய்
வாழ் கிறாய் மனிதன் என .........
சீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாற்றான் தொட்டது    தன மனைவி -இதை
மனம் ஆற்றாது நீ செய்தால் ?
துரோகமன்றோ?

பூவிழி மாந்தர் ,நம் பெண்டிர்
கோல மயில் போன்ற   ,
தோகை கொள்  ஆரணங்கு  -அவள்
அழகு தன்னில் நீ மயங்கி ..

கள்ளத்தனம்  கொண்டு - தினம் 
கரும் பனையின் கள்ளை ருசித்தவராய்
கதி கலங்கி  ...மதி மயங்கி
மாறு உரைத்தல்
அன்றேல் வைதல்
 கொடுமை அன்றோ?

மனிதனே ! நீ தமிழன் என்றால்
அமிழ்து   என்னும்  நம் தமிழன்  புகழ் பாடு !!!!!!!!!

செந் தமிழின்  புகழ் தன்னை
சேவித்து, உன் சென்னி தன்னில்
குட்டிகொள்

வையாதே  மாந்தர் தன்னை
வரம்பு  மீறி  போகாதே


தினவெடுத்தால் ..உடம்புக்கு
தீனி போட  ..அறம் மீறி  போகாதே !


நில் ! கவனி ! செல் !!!
தூரமல்ல   ..அர நெறிகள் .

எம் அரன் தந்த   வேதங்கள்
பொய்யல்ல ...................
வாழ் வின்,  வழி  முறைகள் .


இதை பின் பற்றி நீ  சென்றால்
இது வே   நமக்கு  அரண் ஆகும்


இதமான   எண்ணத்துடன் ,இனிது வாழ
தமிழ் அற நூல்கள் கற்போம்

தமிழ்  தேசியத்தை காப்போம்
நிமிர்ந்து

Keine Kommentare:

Kommentar veröffentlichen