Sonntag, 11. Dezember 2011

எளிமையான சில குறிப்புகள்

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பருத்த வயிறு குறையும்.

இஞ்சிச் சாறை கொதிக்க வைத்து அதே அளவு தேன் ஊற்றி ஆற வைத்து தினசரி காலையிலும், மாலையிலும் உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிற்றைக் குறைக்கலாம்.
வாழைப்பூவை தினமும் கூட்டாக செய்து சாப்பிட்டு வர உடல் ஊட்டமாகும் வயிற்றுப்புண் குணமாகும்.

வில்வ மர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.

வெற்றிலை, ஒமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்று பொறுமல் குணமாகும்.

வில்வபழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட குடலில் கசடு தங்காமல் சுத்தமாகும்.

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மணத்தக்காளி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் குணமாகும்.

பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

மாங்கொட்டைப் பருப்பை நன்றாக காய வைத்து தூள் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட பூச்சிகள் மறையும்.

தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து தயிறுடன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்டால் எல்லா வகையான வயிற்றுப் போக்கும் குணமாகும்.


எலுமிச்சம்பழத்தை உடல் முழுவதும் தேய்த்து கொஞ்சம் நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.


முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான சில குறிப்புகள்





* சந்தனப்பவுடருடன் பன்னீர், கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு இரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.





புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மா போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும் .



பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து அதை அரைத்து மாவாக்கி பெஸ்ட் போல் பயன்படுத்தலாம் இவ்வறு ச்ய்தால் முகம் சுருக்கம் நீங்கும் முக பொலிவும் பெறும்.





* "ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.





*அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். ..

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பப்பாசி மர இலை பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பப்பாசி மர இழையின் சாற்றையும், தேனையும் கலந்து நோயாளிகளுக்குப் பருகக் கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெலிப்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலையைச் சேர்ந்த டொக்டர் ஏ.எஸ்.எம். அமீன் என்ற மருத்துவரே இவ்வாறு டெங்கு நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார்.

இந்த முறையில் 20 நோயாளிகளை தாம் குணப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பாசி மர இலையினால் டெங்கு நோயை தீர்க்க முடியுமா என்ற விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அளிக்க முடியாதென மாத்தறை பொது வைத்தியசாலையில் மருத்துவர் டொக்டர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

எனினும், பப்பாசி இலையை சாறு பிழிந்து அருந்தக் கொடுப்பதனால் பக்க விளைவுகள் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயினால் இரத்தத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை பப்பாசி இலைச்சாறு தீர்க்கக் கூடியதென மற்றுமொரு ஆயுர்வேத மருத்துவரும் தெரிவித்துள்ளார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen