Freitag, 9. Dezember 2011

நான் என்ன விதி விலக்கா? தீப்பெட்டி முத்தம் பெரு நெருப்பை மூட்டுதல் போல்


காற்றின் தழுவலும்   வண்டினத்தின் முகவுரையும்
ஏற்றமிகு என் மனதில்
அவளின் ஏக்கம்

சேற்றில் வளரும் தாமரையா? அவள்

சீற்றமிகு கடலின்  இதமான  தடவல்கள்
ஈரமான  குறு மணலை ...சுதி ஏத்தும் காட்சிகள்
ஆழமாய்   மனதில் குறு குறுக்கும்

காற்றின் தழுவலில் தனை மறந்து
கை விளக்கு
சுடரோ  துயில் கொள்ளும் .

நாற்ருக்களோ  தலை குனியும்

முந்தானை  சேலை  சிலிர்க்க  வைக்கும்

அம்மட்டோ ?
இல்லை இல்லை



முந்தானை அசைவதால் .வெண் பனி சங்குகளின்
பரிணாமம்
இந்தா! இந்தா!!    என கை அசைக்கும்


நான்  என்ன  விதி விலக்கா?  
தீப்பெட்டி முத்தம் பெரு நெருப்பை
மூட்டுதல் போல்

உணர்சிகள் மனதில் விரகமாய்  வெடிக்க
நான் விட்ட
ஏக்க மூச்சின்  காற்றுக்கள்
அனல் காற்றாய்
எரிமலையாய்
என்று தான்  உன் கன்னத்தை
தீண்டுமோ?
துணிந்து

Keine Kommentare:

Kommentar veröffentlichen