Mittwoch, 7. Dezember 2011

நீ எப்போ உணர்வது .... காலதேவனின் கையில் காலத்தின் விதி என்று


வற்றாத நதியாக ஓடட்டும்
பாசமெனும் உன் நினைவோட்டம்..

அதில் வாழத்துடிக்கும் மனதில்
மீனாட்டம் துடிக்கும் இதயம்..........
..
அலை அடிக்கும் !
ஏன் ? புயல் கூட சாமிரம் வீசும்

வெம்மி த் தணியும் மார்பு
ஏக்கத்தில் உன் நினைவாய் !!!!!!!!

சாகத் துடிக்கும் மீனாய்
உன் அன்பெனும் வலையில் சிக்குண்டு நான் .........
.

கரையேறும் படகுக்கு சாதகமாய்
அலைகள் கூட என்னை உன்னுடன் உந்தும்

வலைக்கும் மீனுக்கும் காதலா ?

கடலில் உப்பு எப்படி விளையும் ?
நாம் அழுத கண்ணீர் என்று
யாருக்கு இது புரியும் ?

நினைத்தா பார்த்தோம் ?
என்னை விட்டு நீ வெகு தூரம் செல்வாய் என்று

வழி போக்கர் சொல்வது என் காதில் விழுந்தது
இப்போ இவனொரு குடிகாரன் என்று ......

உன்னை மறக்க நினைத்து
நான் என்னை மறந்து நாளாயிற்று
என்பது கூட எனக்கு மறந்து போகிறது

வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே

நீ எப்போ உணர்வது ....
காலதேவனின் கையில்
காலத்தின் விதி என்று

Keine Kommentare:

Kommentar veröffentlichen