Sonntag, 20. November 2011

என்னே ! எம் விதி ! தமிழா

என்னே !   எம் விதி !  தமிழா
கொஞ்சும் மொழி  தேன் தமிழ் -அமிழ்தே எம் மொழி
ஊனை வருத்தி ,உயிர் வருத்தி
உலகம் பரவிய ஒரே இனம்
தானை நடத்தி  தாரணி காத்த
 தமிழ் தாய்   பெற்ற மைந்தர் நாம் !
-இன்று வீணே   பொழுதை  வீணாக்கும்
அற்ப வீணராய் நாம் வாழ் வதுமேன்?



போட்டி  பொறாண்மை வஞ்சகங்கள்
தமிழன் வாழும் காலமாய்  தொடர்கிறதே !
பதில்  காணும் திறமை நாம் இழந்து
நாட்கள்  கடந்து யுகமாச்சு !
பிழைக்கும் நாட்டில்  போட்டிகளும்
உழைக்கும்  பொழுதிலும் தொடர்வது மேன்?


 மழைக்கு ஒதுங்கும் உயிரினங்கள்
ஒற்றுமையாக  வாழுது காண்!
நம் மினம்   இன்று தலைக்கும்
  கதிரைக்கும் போட்டி இட்டு
நடுத்தெருவில் நிக்குது பார் !


மண்ணுக்கும் பெண்ணுக்க்ம்
 போட்டி இட்டு
பொன்னுக்காக  குலமதனை,
    அழிக்கும்  -கோடரி
ஆனதுமேன் .?


-உலகில்
இருக்கும் பொழுதில் நாம் வல்லவர்கள்
இறக்கும் பொழுதில்   என்ன மிச்சம்


காட்டி கொடுக்கும் இனமதுவாய் ,.கயமை கொண்ட பேரினமாய்
ஊட்டி வளர்த்த தாய்தனை யே!
 கூட்டி கொடுக்கும் கயமையைபோல் .



நாட்டில் கிடக்கும்  பிரச்னைக்கு
 -நாமே நமக்குள்  எதிரிகளாய்
மானம் துறந்து ,மதி கெட்டு
,வீணர்களாய் தமிழ் துரோகிகளாய் -உலகில்  கொடு
அவுணர் களாக   மனதில் மாறி விட்டோம்


ஊனை பெருக்கி  உயிர் வளர்க்க
 எச்சில் கலை நாய்களாக
மாறிவிட்டோம்


விண்ணில் ஒளிரும் சூரியனும்,,,,,  மறைந்து போக நேரிடுனும்
கண்ணில் ஒளிகொண்டு  காவியங்கள் ,,,,,,படைக்கும் தமிழர் நாம் அன்றோ !

பெண்ணின் மானம் பெரிதென்று ,,
,உலகுக்கு நல வழி காட்டியவர்கள்
உண்ண உறங்க  வாழ்ந்த இடம்
  உயர்வு காண   ,,உழைப்பதனை
 உலகுக்கு  கோடிட்டு  காட்டியவர்கள்
வண்ண மயமாய் அணிகலனை
மயக்கும் மங்கைக்கு அணி வித்து
ஆடல்  பாடல் கலை என்று
 உலகை அரசோச்சி  அன்பால் வளர்த்தவர்கள்

போரில்  மறவர் தமிழன்  என்றார்
ஏரில்  உழைப்பில் தமிழன் என்றார்
கூடி வாழும் இனம் என்றால் 
குவலயத்தில் நம் இனம் தான் என்றார்
பேடு களாக நாம் பிறக்கவில்லை -என்று பல
ஏடு  களில்   இலக்கியம் தாம் வரைந்தார்


நாடு போற்றும் உத்தமர்கள்
இன்று நலிந்து   கூழைகும்பிடு போடுகின்றார்
தொன்று தொட்டு வளரும்  எட்டப்பரும்
கூடி கெடுக்கும்  காக்கை வன்னியரும்
சோடி சேர்ந்து  உழைக்கின்றார் ..
சோதனைகள் எமக்கு நிதம் கொடுக்கின்றார்



நாவின் நுனியில்   இனிமை களும்
மனதின் அடியில் வஞ்சகமும்
போட்டி பொறாண்மை கொண்டங்கே
பெயரில் தமிழனாய் வாழாதே


வாழும் காலை  பூமி தன்னில்
மற்றவர் காலை வாராதே
தோழை கொடுத்து  தூக்கி விடு
அவன் யாரி என்றால் 
நேரில் மோதிவிடு


வருகின்ற காலம் நமக்கெனவே
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ
தேடுங்கள் அன்பை மாந்தரிடை -அதனால்
ஒளிமயமே 
எம்மிடை

Sonntag, 13. November 2011

அம மிதியை மிதித்து அரும் தேதி பார்த்து

உண்மைகள் தங்கங்கள் போன்றவை - நீ
எத்தனை முறை தீயில் திருப்பி திருப்பி
புடம் போட்டாலும்
தரமும் குறையாது .........
நிறமும் மாறாது .........
என்கிறாய் நீ
சுட்டால் தானே ஜொலிக்கும் .
வேதனையின் பின் வரும் மகிழ்ச்சி போல
வலியுடன் சேர்ந்த பிரசவம் போல

பட்டால் வரும் அறிவும்
-பொன்னை சுட்டால் வரும்
ஒளிர்வும்
பெண்ணே உனக்கு அணிகலனே !!!!!!!!!!!
கண்ணே என உனக்கு ..
உன் காதலன் தந்த பொற் தாலி கூறும் கதை என்ன?

சீராளன் உன் கணவன்
தாராளமாய் தந்த தாலி
முள் வேலி என்னும் சிறையல்ல

புடம் இட்ட தங்கம் போல்
புதுப் பொலிவாய்
ஜொலி பெண்ணே !

என் வாழ்வின் அர்த்தங்கள்
உன் வாழ்வின் வசந்தங்கள் அத்தனையும் உன் காலடியில்
தந்தேன் எனக் கரம் பற்ற முன்னம் உன் கால் பற்றி
வாழ்வின் முன் அகலிகை போல்
தவறு செய்து நீ இருந்தால் ..
முப்பத்து முக்கோடி தேவர் முன்
மண்டபத்து பெரியோர் முன்

அம மிதியை மிதித்து
அரும் தேதி பார்த்து
இத்தினத்தில் இல்லறமாம்
நல்லறம்
புகுவோம்
வா பெண்ணே என அழைப்பான்
 
இப்போ சுட்ட பொன்னாய்
தங்கமாய் ஒளிர்பவள்
நீ தானே
வாழ்க நலமுடன்
----------------ஸ்ரீ ராஜா

Mittwoch, 2. November 2011

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம்

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.
செம்பருத்திப்பூ
மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.
ஆவாரம்பூ
காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.
மாம்பூ
மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும்.
நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.
துளசி இலை
சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.
கொத்தமல்லி தழை
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்
புதினா இலை
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்
கொய்யா இலை
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்

Mittwoch, 19. Oktober 2011

என்னுடையதல்ல

சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
 சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
 செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
 இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Montag, 17. Oktober 2011

மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை தொடர்கிறது என்றோ ஒரு நாள் நனவாகும் என்னும் நம்பிக்கையில்

அன்பே !அன்பே !
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
என்கிறாயே


நீ காட்டும் எட்டுத்திசையும்
தறிகெட்டு அலைந்து விட்டேன்
ஒரு முறையேனும் உன் மார்பை சுட்டிகாட்டி சொல்லு
உன் இதயத்தில் நான் இல்லை என்று

பல முறை பிறந்தாலும்
என் மார்பில் நீ தூங்கும் காலம் வரும்
என்ற என் நம்பிக்கையின் ஒளிக்கீற்று
என் மூச்சை உயிர் பிக்கிறது


கனவின் நீளம்
கண் விழித்ததும் முடிவடையும்
என்கிறாயா?

பேதை பெண்ணே
நினைவெல்லாம் நீ தானே
என் நனவே கனவாக
மாற்றியவள் நீ என்பதால்
என் நினைவின் நீளம் உன்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்


ஒவ்வொரு வாழ்வின் முடிவெல்லை
மரணமாக இருக்கலாம் ,
ஆனால் அன்பை வென்றவர்கள்
இதயத்தில் வாழ்வார்கள்

உடல்கள் அழிக்கப்படலாம்
கண்ட உண்மைகள்
நனவாக தொடர்ந்து வரும்

ஒவ்வொரு மரணத்தின்
முதல் எல்லை
வாழ்வாக இருந்ததில்லை....
என்று சொல்பவர்கள் உணருங்கள்

பிறக்கும் மனிதன் பிணமாக பிறந்து
ஜனனிக்கும் பொழுது
அம்மா என அழுது
பூமியில் மனிதனாக
அடையாளம் பெறுகிறான்

அதன் பின் கனவும் நனவும்
வாழ்வின் போராட்டமாக
மாற
மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை
தொடர்கிறது
என்றோ ஒரு நாள் நனவாகும்
என்னும் நம்பிக்கையில்


நீ விட்ட மூச்சு தானே என் சுவாசம் என்றான பின்பும் கூட எமக்குள் பிரிவு ?

பெண்ணே நில் நான் இழந்தது
உன் அன்பைத்தானே
இருந்தும் சிதைந்தது என்ன ? எங்கள் அமைதிதானே
..
நீ விட்ட மூச்சு தானே
என் சுவாசம் என்றான பின்பும்
கூட எமக்குள் பிரிவு ?
ஆச்சரியம் !!!!!!!!!

நுரஜீரல்ம் காற்றும் ஒட்ட வில்லை
மனிதர் வாழ ஏது வாகிறதே!!!!!!!!!!!!!!

உன் இதயம் சொல்வதை கேள்
மற்றவர் சொல்வதை உன் மனதில் இட்டு அலசு
என் மனதில் அன்பெனும் உளிகளால்
உன்னையே
இருதயத்தில் சிலையாய் வடித்தவளே
எப்போதும் உன்சிந்தனை நினைவுகள்
என்னை உயிரோடு தூக்கில் இடுகின்றனவே

துரத்தும் உன் நினைவுகள்
இதயத்தின் இயக்க மாய் ..
என்னை கொல்கிறதே
அன்பே !
அந்நேரம் உனக்குள் நான் தொலைந்து
போ னதை மீண்டும்
நினைவு படுத்தும் .


தூக்கத்தில் இருக்கும் உன் மனது
என்று தான் விழிக்குமோ ?
அது வரையில் தடம் புரளா
உன் அன்பெனும் தண்டவாளத்தில்
ரயிலாக நான்

Sonntag, 2. Oktober 2011

வாழ்கின்ற வாழ்வில் -நீ என் மூல தனம் வாடுகின்ற இவ் வேழைக்கு-நீ நந்தவனம் காட்டாதே எனக்கு நீ கள்ளத்தனம்



என்றோ ஒரு நாள் எனக்காக
உன் உதடு சொல்லும் ஒரு வார்த்தைக்காய்
நம்பிக்கையின் ஒளியில் அந்தரிக்கும்
ஜீவனாய் நான்



வான் மதியாய்  என் வாழ்வில்
ஒளியேற்ற  வா என்றேன்


நீயோ என்னை பழிவாங்க
அமாவாசை யாய் இருண்டு அட்டமி நவமி யாய்
தேய்ந்து வளர்ந்து  பூரணையாய்
  வதன நிலவாய்
ஒளிகாட்டி இருள் காட்டி 
நின்  மதியை
ஏனோ பறிக்கிறாய்?


கூடு கட்டும்
குருவிக்கும் பேடு உண்டு
குலவுகின்ற அன்றிலுக்கும் சோடி உண்டு
கொடிமலரே எனக்கென்று  என்ன உண்டு????????????


பாடுகின்ற  குயில்கள் எல்லாம்  கீதம் பாட
தேடுகின்றேன் உந்தனை நான்
தோழியாக !


கூடு விட்டு  ஆவி தான் போயிடினும்
குலமகளே
நீ தானே  எந்தனது
 இதய ராணி

ஆடுகின்ற  ஆட்டம் எல்லாம்
வாழ்க்கை அல்ல
தேடுகின்ற  சுகம் எல்லாம்
 சொர்க்கம் அல்ல


மாடு போல் உழைத்தாலும்
வையகத்தில்
 மகிழ்ந்து வாழ  உறவொண்டு
 வேணுமடி


திகட்டாத  தேன் சுவைகள்
 இல்லறத்தில்
தினம் தினமாய்  குலவி நாங்கள்
மகிழ்ச்சி காண்போம்

பகட்டான  வாழ்க்கையில்
எந்த பண்பும் இல்லை
தெவிட்டாத  இன்பம் உண்டு 
 குடும்பமதில்


வாழ்கின்ற வாழ்வில் -நீ
என் மூல தனம்
வாடுகின்ற  இவ் வேழைக்கு-நீ
நந்தவனம்
காட்டாதே எனக்கு நீ
கள்ளத்தனம்


தென்றலின்  சிணுங்கல்கள் ,முத்தத்தின் சூடுகளில்
நான் தவிக்க.....................
 ,சிங்காரம்  செய்யும் வண்டுகளின் ரீங்காரம்
நெடிதான வேப்பமரக் காற்றின்  இதமான  அரவணைப்பு
இவையாவும் ?????????
கண்ணே நீ எனை பிரிந்த நாட்களின்
ஏமாற்றங்களின்  தனிமை என்னை தீ மூட்ட 


என் இதயம் கவர்
வடி வழகே ஓடி வா
நாம் மகிழ்ந்து வாழ்ந்து -உயிரான காதலுக்கு
முடியை சூட்ட ...................