Dienstag, 20. September 2011

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றமுடன் வாழ்வோம் இனி நாம்-இளமை காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன் கருத்தொருமித்து வா

ஒரு நிமிடம்  ஆவது
உன்னை  என் விழிகளால் அளக்க ....
உன் முகத்திரை ஊடே  புகுந்து
 இதயத்தில் வாழ ............


காதலி என் காதலி
 போதையின் சூட்டிலே
  நான்  மன்மதன் ஆக


ஆம் என்றொரு வார்த்தை
 உன்னிடமிருந்து
வருமா? வருமா?   என் முகம்நோக்கி


திரை கடல்  ஓடி நான்  திரவியம் தேடினேன்
நரை  திரை வரு முன்  வாலிபக் கரை  ஏறவேண்டி
உனதன்பை நாடி
உறவுகள் துறந்து
உன் பெயர் எழுதியே   என் விரல்கள்  தேய்ந்து
உன் ஓரப் பார்வையில் வாழ்வையே தொலைத்து
நடை பிணமாகி
உன் பின்னே  வருகிறேன்


நீ விட்ட  மூச்சை என் சுவாசமாக்கி
வாழ்வின் இறுதியை உன்னோடு  சேர்ந்து
  வாழவே  துடிக்கிறேன்


நீ சொன்ன  வார்த்தைகள்
மனத்தில்  ரணமாய்
மரணத்தை   நோக்கி  தூண்டி நின்றாலும் -என்
மௌனத்தின்  மொழிகளை 
உன் பார்வையில் விட்டு
நம்பிக்கை , மனதின் ஊன்று கோலாய்
நிமிர்ந்து  உன்னை  நோக்குவேன்
காதல் யாசகனாய் !!!!!!!!!!!


உன் பெயரை உச்சரிக்கும் பொழுதில்
உவகையால் மனமது  துள்ளி துடித்து
நன்றே உலகத்தில்  வாழ்  என்று  சொல்லும்

பசு
கன்றே  ஆகினேன்
காதலி நீ எனக்கு தாய்ப் பசு ஆகுவையோ ?

இன்றே எனக்கொரு ஆறுதலாய்  -உன்
இன்முகம் காட்டுவாயோ ?

முன்னே  எமக்கு  பூர்வீகத்  தொடர்போ ?
முத்தமிழே  ,கொடி மலரே .,வெண் கமல
ராணியே  சற்றே  எனக்கு
  உன் மனம் எனும் அரியணையில்
என் காதலை   ஏற்க்காயோ ?


சுற்றே வல் புரியும் உன் சேவகன்
ஆகி நான்  உன் காலடி கிடப்பேனே 

என் காதலை  வர்ணிக்க வார்த்தையே  இலையே
என் பிரியமான தோழியே கேள் !

காதலன்  காதலி இருவர்
கருத்தொருமித்த  காதலும் கசக்குமோ சொல்?
பூதலம் மீது  புனிதமாய்  என் காதல்
அகதியாய் தவிக்கு து  பாராய் !

அடைக்கலம் கொடுத்து
என்னை அன்போடு  தூக்கி
உன் மார்போடு அனைத்து கொள்


இம் மேதினி மீதில் இன்சுகம் பெற்று
 இன்புற்று  வாழ்வோம்
விரைந்தோடி வா
 எந்தன் முன்


போற்றுவார் போற்றட்டும்   தூற்றுவார்  தூற்றட்டும்
ஏற்றமுடன் வாழ்வோம்   இனி நாம்-இளமை
காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன்
கருத்தொருமித்து வா

சிற்றின்ப வேளையில்  சிலுமிசங்கள் செய்து
பேரின்பம்  காணுவோம்  வா

Montag, 19. September 2011

மரத்து போன எண்ணங்களுடன் எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை யாசிக்கிறேன்


விட்டுக்க் கொடுப்புக்கள்
வெகுமதியானவையாம் - நீயும்
விட்டுக்கொடுத்துவிடு.....
என்று  நீ  இலகுவாய்   சொல்லிவிடலாம் .


உண்ணும்போதும்  உறங்கும் போதும்
கண் முன்  வரும்   விம்பமே !!!!!
சொல்வது  எவ்வளவு  எளிது
வீட்டு விடு  உயிரை   என்றால்  விட்டு விடவும்  தயார்

ஆனால்  எனது காதல்
அல்லவா அழிந்து விடும்
இறந்து போனஎன் உணர்வுக்கு
காணிக்கை  இல்லையடி


மரத்து போன எண்ணங்களுடன்
எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை  யாசிக்கிறேன்

பணமும் பகட்டும்  காதல் அல்ல
நிணமும்  சதையும் காதல் அல்ல
பாதைகள் தெரியாத  பயணியா? நான்
அன்றேல்  உன் பார்வையில் வெறும்
 சதை பிண்டங்களுக்கு துடிக்கும் பிராணியா?  யான்


 நீ இமைக்கும் போது எந்தன்
உள்ளத்தில்  பூ பூக்கும்
உன் கண்களின்  படபடப்பில்
என் தேகம்   சூடேறும்
உன்  உதடு வெடித்து வரும் புன்னகையில்
என் உணர்வுகளில்  போதை ஏறும்


முத்து ஒளித் தீபமே
போதை என்
நெஞ்சில்  ஏற்றும்
 தீபமே
 வானத்தின் ஒளிரும்
தாரகைகள்   கண்சிம்மிட்டி
  என்னை  நையாண்டி  செய்கிறதே

எங்கோ தெரு நாய்கள்  ஊளை  இட
இங்கோ அங்கோ என
 என் மனமும்   பந்தாகி தவிக்க
முற்றத்தில் குவித்த 
குறு மணலில்
குந்தி இருந்து  என வானத்து தேவதைஉன்னை
நிலவாய்   யாசித்து 
  உந்தனது  வருகை க்காய்
தினமும்  உன் நினைவுகளுடன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Freitag, 16. September 2011

உயிரே உன் மெளனம் எனை கொல்கிறது வாய்திறந்து ஒரு வார்த்தை பேசு.

உயிரே
உன் மெளனம்
எனை கொல்கிறது
வாய்திறந்து
ஒரு வார்த்தை பேசு...என்கிறாயா?

நானும்  நீயும் ஒன்றி இணைந்து
ஒருவர்  ஆனா  பின்பு 
வார்த்தைகளில்
பயன் இல்லையே
என்  செல்லம்!!!!!!!!!!!!!!


கணகளில் ஊடு புகுந்து
என் இதயத்தில்  துடிப்பது  உன் உயிர் தானே

என் உடலின் அசைவுக்கு அடி நாதம்  நீ  ஆன பின்பு
வருங்காலம் இன்பம்  என்று
நிகழ  காலம் கூறுவது
வார்த்தை  அல்ல

கட்டியம்    
புதிய கவிதை   புனையும்
விண் மதியே!!!

வருவாய்
உன் மதி வதனம்  மகிழ்ச்சி பொங்க

எனது  காதல்  தேசத்தில்  ஒருங்கிணைந்த  அன்றில்களாய்  பறப்போமா?
இப்பார்  எங்கும்

வா
 

Mittwoch, 14. September 2011

எனக்கோர் உயிராக ,மலரே கொடியே ,மதுரசமே -கமல தாமரையே ,வதன நிலவே ,அதிரசமே , உறவே ,உயிரே,

எண்ணம்  எனும்  ஆசைப்படகில் இன்பமாய் நீந்துபவளே -அன்பே
உன்னை நான்  நேரில்  காணும் நாள்  எந்நாளோ?
சின்னக் கதைகள்  பேசும்  செம்பவள வாய்  முத்தம்  நான்  தருவதும்  எந்நாளோ ?
பெண்மை  துள்ள  ஆண்மை உன்னை  வெல்ல -எம் பள்ளி அறை நாள் எந்நாளோ ?


எண்ணம்  அறிந்து இன்பசுகம் அளிக்கும் , வாயில் கனியமுதம்  தேன் சுவையாய் இனிக்க ,
விண்ணகத்து  தேவதை அரம்பாய் நீ மாறி , கண்ணா என்று எனை  அணைத்து,
தென்றல்  எனத் தழுவி,  கானகத்து மோனக் குயிலாய் -என்பைங்கிளியே
நண்ணியே  வாராயோ   சுகம் தனை  ஈயும் வதன  நிலவாய்



             
அமுது  ஊரும்  இதழ் களால் , என் உடம்பு காதலால்  கொண்ட நோயினை
ஒத்தி   வெப்பம்  தணிக்காயோ?
காணும்  போது  காதல் போதை தரும்  கண்களை  --நான்
நீ நாணம்  பொங்க  நான் பொத்தி விளையாட
,நீ சிணுங்கும் போது
மேலாடை சரிந்து  -உன்  அங்கங்கள்  தலை  ஆட்ட (காட்ட)
 ஆசை கொண்ட மோகத்தால்  உன்னை  சூடாக  நான் அணைத்து
தேகம் தேடும்  சுகமெல்லாம்   தேடி தேடி  நான்  தணிக்க

ஆகும்  நாள்  வரும்  வரைக்கும் . காத்திருப்பேன்  பைங்கிளியே!!!!!!!

தாயின்  கருணையும்  தந்தையின் அன்பும்
உன் வாயில்  ததும்பும்  வார்த்தைகளால் -மயங்கி
உன் காலடியில்  நான்  உறங்கும்  நாளை  எண்ணி
இந்த வருந்தும்  உயிருக்கு  காதலியே
-என்றும்  மருந்தாக
எனக்கோர்  உயிராக ,மலரே  கொடியே  ,மதுரசமே -கமல
தாமரையே ,வதன  நிலவே  ,அதிரசமே , உறவே ,உயிரே, கலைப்பெட்டகமே
உண்ணும்  உணவின்  அமுதமே -உன் திறந்த இதயக் கதவு தன்னை
அலங்காரக் கோதையே !,அரசாளும் இதய ராணியே ...
எனக்காக  என்னிடத்தில் தா.......ஸ்ரீ ராஜா

-

உன் மனம் தன்னை திருடிய வழிப்போக்கன் நான் எனில் பயம் தன்னை விடுத்து என் மார்பினில் சாய்ந்திடு

காந்தமாய் கண்கள்  காதலில்  பொங்கி
நீளமாய்           வெகு நீளமாய்  நீண்டு-
  உன் உருவினை விழுங்கும்

ஏக்கத்தில் உள்ளம்
  நினைவுகள் தடுமாறும்.

கூட்டத்தில்  போகும்  கூட்டத்தின் நடுவே
தவழும் நிலவே
 தாரகையே!!!!!!!!!!  உன் நினைவால் வெதும்பி உடலால்  உருகும்
ஏழையும் இவன் தான்

பார்க்கவும் அன்பாய் பழகவும்
ஜோடியாய் திரியும் அன்றிலாய்

குளிருக்குள்  இதம் சேர்க்கும்  யோடியாய்
வானத்தில் பறக்கின்ற
அன்பு வானம் பாடியாய்  வாழவே  வா

தேடிடும் அன்பும் தேக சுகமும்
கூடலும்  ஊடலும்
சுகந்தமாய் அணைப்பும்
பூதலம் மீது  புரிந்துனர்வாய்
  யோடியா சேர்ந்திட வா

ஆடிடும் அலைகள்
 காலடி அணைக்கும் கூதலின்

  நடுவே  குயிலினம் பாடும்
  காக்கையும்  கரையும்

பாடிடும்  அலையிலே
 பள்ளி  தான் கொள்ளும்

 மாயவன் சோடியாய்
 இணைந்திட வா

சேலையின் தலைப்பில்
 நெளிந்திடும் முந்தானை
வா என  அழைக்குதே  பார்

ஆடிடும் சேலையில்
பாதியே  விலகியே
 காட்டிடும் அழகை
கை கொண்டு மூடுது
 உன் கரும்
 தோகை அடி


நீ நடந்திடும் போது
அசைந்திடும் பிட்டங்கள்
 என்னை  நளினம் செய்வது
 அறிகுவையோ?

இத்தனை அழகுடன்  கூடிய
 யாரிந்த தேவதை?
என  அறிந்திட  ஆவலை
தூண்டிடவே
கை கொண்டு  தட்டினேன்
 உன்னை

அழைப்பது போல்
இங்கிதம்  தெரிந்ததால்
மெல்லெனக் கேட்டேன்
உனக்கு துணையாய்
வருவதற்கே

 வாழ்வது  நூறு தான்
மாழ்வதோ மண்ணில் தான்
ஆசையாய்  கேட்கிறேன்
கமலா  லட்சுமியே!!!!!!!!!!


எத்தனை துன்பங்கள் வந்தாலும்
 எத்துனை  எதிர்ப்புகள் வந்தாலும்
துணிந்தே  என் கரம்பற்று
  தாரகையே


பூமியில் மீதிலே தெம்மாங்கு பாடுவோம்
தீந்தமிழ் மொழியிலே  காவியம் பாடுவோம்
சீரிய புகழுடன் நீடூழி வாழுவோம்


உற்றவர் உறவினர்
 நண்பர்கள் விரோதியர்
அத்தனை உள்ளத்தின்
 ஆசியுடன்

அறம் சொல்லும்  வழியிலே
நல்லறம் சமைப்போம்


உன் மனம் தன்னை திருடிய
வழிப்போக்கன் நான் எனில்
பயம் தன்னை விடுத்து
என் மார்பினில் சாய்ந்திடு

தளர்ந்திடும் கால்களுக்கு
 உறுதியாய் நீ சொல்லு
மன்னவன் வருகின்றான்
பின்னால்  என்று

Dienstag, 13. September 2011

காத்திருக்கின்றவேளையில் தழுவும் காற்று உன் மனம் தொட்டு யாசிக்கின்றது உன்னிடம் அது எங்கே உனக்கு புரியப் போகிறது ?????????????????

அன்பே !
அவனின்
 வரவை அறிந்த நொடி முதல்
விழிகள் இரண்டும்
 இமைக்க
மறுத்து விடுமாறு
சொல்லு அதனிடம்



நீ வரும் பாதையில்
...பார்வைப் பூக்களைத் தூவி
ஓன்று  இரண்டு   சொல்லவா????????????


நீ


அவனுக்கு
மலர்ப்பாதை அமைத்து

காத்திருக்கின்றவேளையில்  தழுவும்  காற்று  உன் மனம் தொட்டு
 யாசிக்கின்றது உன்னிடம்
அது  எங்கே  உனக்கு  புரியப் போகிறது ?????????????????

இப்படிஇருக்கும் போதி ல்


ஜனனத்துளிராய் துளிர்த்த
உன் நினைவுகளுக்கு    விடுமுறை  கேட்டு
பார்வை எனும் நீரூற்றி என் மனதை
பசுமை வயலாய் மாற்றிவிடு என...
நீ  கேட்பது
வேதனையடி

தளராத விக்கிர மாதிதன் மீண்டும் மீண்டும் காதல் தேவதை அன்பை நாடி




விருப்பு  வெறுப்பு
அன்பு காதல் ? இதுவா ? காதல் !!!!!!!!!!!!

வெறித்தன  வாழ்க்கை ?

கருப்பு சிவப்பு ,சாதி  சமயம்
காதலை மறுக்க
உடுப்பும்  மினுக்கும் ஆடம்பர வாழ்வும்
நெருக்கத்தை கூட்டும்?


சிரிக்கும் மனதில் சில்லறை த்
தனங்கள் ?

அரிக்கும் மனதில் அளவற்ற  வலிகள் -உன் வாயில்
தெறிக்கும்வார்த்தைகள்
 கொல்லும் அளவால்
பூலோக நீரும்  பொங்கி கொதிக்கும்
இது தான்  சுனாமி யோ ?


கட்டற்ற  விருப்போ............ காட்டாற்று  வெள்ளமாய்
காதலின் போதை யில்

நீந்தி கடக்க    எட்டும்   திசைகளில்
எண்ண பரிமாற்றங்கள் --இதுவும் காதல் ?

 என்ன பரி மாற்றம் ?

கண்கள்  கற்பனையில்   கிறங்கும்
எண்ணங்கள்  கற்பனையில்  
சிறகடிக்கும்

சிணுங்கல்கள்  பொய் கோபங்கள்
விரகங்களின்   விளிம்பில்
தொலை பேசும்   skype இல்
நேரடி மோதல்

போடா !!!!!
போடி!!!!!!!!
எத்தனை பாசம் ?

என்ன?    என்ன ?  
    எண்ணக்  குழப்பத்தின் முடிவுகளே ,,,,,,,இன்று ,,,,
முகவுரை   ஆகும்

தகவுரை  கூற
தரவுகள்   துடிக்கும்


தருணங்கள்  இன்றி  உறவுகள்  ஏங்கும்

ஏக்கத்தின் வலிகள் .. புரியாத  மனங்கள்

மனங்களின்  பிரிவில்   மரண ஓலங்கள்

கண் இல்லாக் காதல்
கருத்துக்கள் இன்றி
பரிந்துரை  செய்ய


மீண்டும்  வேதாளம்  முருங்கையில் ஏற

தளராத   விக்கிர மாதிதன்
மீண்டும்  மீண்டும்
காதல்  தேவதை   அன்பை  நாடி