Dienstag, 20. September 2011

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றமுடன் வாழ்வோம் இனி நாம்-இளமை காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன் கருத்தொருமித்து வா

ஒரு நிமிடம்  ஆவது
உன்னை  என் விழிகளால் அளக்க ....
உன் முகத்திரை ஊடே  புகுந்து
 இதயத்தில் வாழ ............


காதலி என் காதலி
 போதையின் சூட்டிலே
  நான்  மன்மதன் ஆக


ஆம் என்றொரு வார்த்தை
 உன்னிடமிருந்து
வருமா? வருமா?   என் முகம்நோக்கி


திரை கடல்  ஓடி நான்  திரவியம் தேடினேன்
நரை  திரை வரு முன்  வாலிபக் கரை  ஏறவேண்டி
உனதன்பை நாடி
உறவுகள் துறந்து
உன் பெயர் எழுதியே   என் விரல்கள்  தேய்ந்து
உன் ஓரப் பார்வையில் வாழ்வையே தொலைத்து
நடை பிணமாகி
உன் பின்னே  வருகிறேன்


நீ விட்ட  மூச்சை என் சுவாசமாக்கி
வாழ்வின் இறுதியை உன்னோடு  சேர்ந்து
  வாழவே  துடிக்கிறேன்


நீ சொன்ன  வார்த்தைகள்
மனத்தில்  ரணமாய்
மரணத்தை   நோக்கி  தூண்டி நின்றாலும் -என்
மௌனத்தின்  மொழிகளை 
உன் பார்வையில் விட்டு
நம்பிக்கை , மனதின் ஊன்று கோலாய்
நிமிர்ந்து  உன்னை  நோக்குவேன்
காதல் யாசகனாய் !!!!!!!!!!!


உன் பெயரை உச்சரிக்கும் பொழுதில்
உவகையால் மனமது  துள்ளி துடித்து
நன்றே உலகத்தில்  வாழ்  என்று  சொல்லும்

பசு
கன்றே  ஆகினேன்
காதலி நீ எனக்கு தாய்ப் பசு ஆகுவையோ ?

இன்றே எனக்கொரு ஆறுதலாய்  -உன்
இன்முகம் காட்டுவாயோ ?

முன்னே  எமக்கு  பூர்வீகத்  தொடர்போ ?
முத்தமிழே  ,கொடி மலரே .,வெண் கமல
ராணியே  சற்றே  எனக்கு
  உன் மனம் எனும் அரியணையில்
என் காதலை   ஏற்க்காயோ ?


சுற்றே வல் புரியும் உன் சேவகன்
ஆகி நான்  உன் காலடி கிடப்பேனே 

என் காதலை  வர்ணிக்க வார்த்தையே  இலையே
என் பிரியமான தோழியே கேள் !

காதலன்  காதலி இருவர்
கருத்தொருமித்த  காதலும் கசக்குமோ சொல்?
பூதலம் மீது  புனிதமாய்  என் காதல்
அகதியாய் தவிக்கு து  பாராய் !

அடைக்கலம் கொடுத்து
என்னை அன்போடு  தூக்கி
உன் மார்போடு அனைத்து கொள்


இம் மேதினி மீதில் இன்சுகம் பெற்று
 இன்புற்று  வாழ்வோம்
விரைந்தோடி வா
 எந்தன் முன்


போற்றுவார் போற்றட்டும்   தூற்றுவார்  தூற்றட்டும்
ஏற்றமுடன் வாழ்வோம்   இனி நாம்-இளமை
காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன்
கருத்தொருமித்து வா

சிற்றின்ப வேளையில்  சிலுமிசங்கள் செய்து
பேரின்பம்  காணுவோம்  வா

2 Kommentare:

  1. உன் பெயர் எழுதியே என் விரல்கள் தேய்ந்து
    உன் ஓரப் பார்வையில் வாழ்வையே தொலைத்து ...

    AntwortenLöschen