Mittwoch, 14. September 2011

எனக்கோர் உயிராக ,மலரே கொடியே ,மதுரசமே -கமல தாமரையே ,வதன நிலவே ,அதிரசமே , உறவே ,உயிரே,

எண்ணம்  எனும்  ஆசைப்படகில் இன்பமாய் நீந்துபவளே -அன்பே
உன்னை நான்  நேரில்  காணும் நாள்  எந்நாளோ?
சின்னக் கதைகள்  பேசும்  செம்பவள வாய்  முத்தம்  நான்  தருவதும்  எந்நாளோ ?
பெண்மை  துள்ள  ஆண்மை உன்னை  வெல்ல -எம் பள்ளி அறை நாள் எந்நாளோ ?


எண்ணம்  அறிந்து இன்பசுகம் அளிக்கும் , வாயில் கனியமுதம்  தேன் சுவையாய் இனிக்க ,
விண்ணகத்து  தேவதை அரம்பாய் நீ மாறி , கண்ணா என்று எனை  அணைத்து,
தென்றல்  எனத் தழுவி,  கானகத்து மோனக் குயிலாய் -என்பைங்கிளியே
நண்ணியே  வாராயோ   சுகம் தனை  ஈயும் வதன  நிலவாய்



             
அமுது  ஊரும்  இதழ் களால் , என் உடம்பு காதலால்  கொண்ட நோயினை
ஒத்தி   வெப்பம்  தணிக்காயோ?
காணும்  போது  காதல் போதை தரும்  கண்களை  --நான்
நீ நாணம்  பொங்க  நான் பொத்தி விளையாட
,நீ சிணுங்கும் போது
மேலாடை சரிந்து  -உன்  அங்கங்கள்  தலை  ஆட்ட (காட்ட)
 ஆசை கொண்ட மோகத்தால்  உன்னை  சூடாக  நான் அணைத்து
தேகம் தேடும்  சுகமெல்லாம்   தேடி தேடி  நான்  தணிக்க

ஆகும்  நாள்  வரும்  வரைக்கும் . காத்திருப்பேன்  பைங்கிளியே!!!!!!!

தாயின்  கருணையும்  தந்தையின் அன்பும்
உன் வாயில்  ததும்பும்  வார்த்தைகளால் -மயங்கி
உன் காலடியில்  நான்  உறங்கும்  நாளை  எண்ணி
இந்த வருந்தும்  உயிருக்கு  காதலியே
-என்றும்  மருந்தாக
எனக்கோர்  உயிராக ,மலரே  கொடியே  ,மதுரசமே -கமல
தாமரையே ,வதன  நிலவே  ,அதிரசமே , உறவே ,உயிரே, கலைப்பெட்டகமே
உண்ணும்  உணவின்  அமுதமே -உன் திறந்த இதயக் கதவு தன்னை
அலங்காரக் கோதையே !,அரசாளும் இதய ராணியே ...
எனக்காக  என்னிடத்தில் தா.......ஸ்ரீ ராஜா

-

Keine Kommentare:

Kommentar veröffentlichen