Montag, 19. September 2011

மரத்து போன எண்ணங்களுடன் எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை யாசிக்கிறேன்


விட்டுக்க் கொடுப்புக்கள்
வெகுமதியானவையாம் - நீயும்
விட்டுக்கொடுத்துவிடு.....
என்று  நீ  இலகுவாய்   சொல்லிவிடலாம் .


உண்ணும்போதும்  உறங்கும் போதும்
கண் முன்  வரும்   விம்பமே !!!!!
சொல்வது  எவ்வளவு  எளிது
வீட்டு விடு  உயிரை   என்றால்  விட்டு விடவும்  தயார்

ஆனால்  எனது காதல்
அல்லவா அழிந்து விடும்
இறந்து போனஎன் உணர்வுக்கு
காணிக்கை  இல்லையடி


மரத்து போன எண்ணங்களுடன்
எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை  யாசிக்கிறேன்

பணமும் பகட்டும்  காதல் அல்ல
நிணமும்  சதையும் காதல் அல்ல
பாதைகள் தெரியாத  பயணியா? நான்
அன்றேல்  உன் பார்வையில் வெறும்
 சதை பிண்டங்களுக்கு துடிக்கும் பிராணியா?  யான்


 நீ இமைக்கும் போது எந்தன்
உள்ளத்தில்  பூ பூக்கும்
உன் கண்களின்  படபடப்பில்
என் தேகம்   சூடேறும்
உன்  உதடு வெடித்து வரும் புன்னகையில்
என் உணர்வுகளில்  போதை ஏறும்


முத்து ஒளித் தீபமே
போதை என்
நெஞ்சில்  ஏற்றும்
 தீபமே
 வானத்தின் ஒளிரும்
தாரகைகள்   கண்சிம்மிட்டி
  என்னை  நையாண்டி  செய்கிறதே

எங்கோ தெரு நாய்கள்  ஊளை  இட
இங்கோ அங்கோ என
 என் மனமும்   பந்தாகி தவிக்க
முற்றத்தில் குவித்த 
குறு மணலில்
குந்தி இருந்து  என வானத்து தேவதைஉன்னை
நிலவாய்   யாசித்து 
  உந்தனது  வருகை க்காய்
தினமும்  உன் நினைவுகளுடன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

2 Kommentare:

  1. முற்றத்தில் குவித்த
    குறு மணலில்
    குந்தி இருந்து என வானத்து தேவதைஉன்னை
    நிலவாய் யாசித்து ...........

    AntwortenLöschen