Samstag, 3. September 2011

சித்திரை நிலவே ! காயாதே -எந்தன் வேதனை உனக்கு புரியாது



கவிதையின் தாயே  கற்பனையின்  உருவே
உன் எதிர்காலம்  உனது கையில் -நீ  உணர்வாய்
பசித்தால்  உணவு தன்னை   உன் கையால்
புசித்தே ஆவது  நீ தானே ,
ஊடு மீன்  ஓடட்டும் விட்டுவிடு
வரு மீன்  வரட்டும்  ,புசித்து விடு
இருப்பது சில நாள்   அனுபவிப்பாய்
கருப்பையின் உயிருக்கு உணவீந்த
பரமனும்,          எங்கோ உனக்கென
                                                    எழுதிவைப்பான்
 இக்கரைக்கு   அக்கரை பசுமையடி
அக்கறையாலே  சொல்லுகின்றேன்
பத்தரை மாற்று  பசும் பொன்னே
இத்தரை மீது  எனக்கென்று,  உந்தனை படைத்தான்  ஆண்டவனே
சித்திரை நிலவே ! காயாதே -எந்தன்  வேதனை உனக்கு புரியாது
முத்திரை பதிக்க  ஆசையடி -எனக்கு முகத்திரை நான்  இன்னும் போடவில்லை
நித்திலம் போற்றும்  முத்து -நீ
சேற்றில் மலர்ந்த    கமல தாமரை  யே
ஆதவன் மீது கொண்ட  காதலினால்
கொக்காய் கடும் தவம்  செய்கின்றாய்
பகலில்  மலரும் தாமரை நீ
நானோ  இரவில் மலரும்   அல்லிப்பூ
வட்ட நிலாவை  நிலவதனை
பார்த்து மகிழும் அல்லி நான்
தாமரையும்  அல்லியும் காதல்  கொண்டால்
ஒரு தலைக்காதல் என்றுணர்வாய்
ஆண்டவன்   பூசையில் பூசை கென
  எம்மை  சேர்த்து வைப்பார்
ஒருதட்டில்
அந்த நாள்  வரும் வரைக்கும்
எந்தன்  கண்ணே  கலங்காதே
அப்போது  நாம் பேசிக்கொண்டு
கிடப்போம் ஆண்டவன் காலடியில்

Freitag, 2. September 2011

ஒற்றைக் காலில் தவம் செய்யும்அருஷுனனாய் .....

பிரசவ வலியின் பின்
  இன்பம் இன்பம்
மகவின் மழலை
 இன்பம் இன்பம்----------- .குழவி
செய்யும்  சேட்டைகள்
  வலி தான் ஆனாலும்
குலவி மகிழும் இன்பமின்பம்
கண் மணியே
நீ தூங்கி விட்டாய்
உனக்கு பாது காப்பாய்
 உன் இமைகள்
கண் மடல்களை
அணைத்துக்கொண்டு
உன்னுடன்
  தூங்குகிறது
பாவம் இவன்
வெளியே உன் கண்களுக்கு
பாதுகாப்பாய்

ஒற்றைக் காலில் தவம்
செய்யும்அருஷுனனாய் .........................

மீண்டும் தீண்ட எரிகிறது, தூண்டியவன் யார் தோழி நீ சொல்லு! ஆண்ட இனங்கள் மறு இனத்தை ,அடிமை செய்வது முறையோ சொல் ,

 மீண்டும்  தீண்ட  எரிகிறது,  தூண்டியவன்  யார்  தோழி நீ  சொல்லு!
ஆண்ட  இனங்கள்    மறு இனத்தை  ,அடிமை  செய்வது  முறையோ சொல் ,
பூண்ட  லட்சியம்  ஒன்றுக்காய், பூமிகள்  அங்காங்கே  எரிகிறதே
மாண்டால் மாந்தர்   விடுதலையை ,கேட்க மறப்பரோ  வழிவந்தோர்

பாரதி வந்தான்  ,பாரதத்தில்  -பிர
பாகரன் வந்தான்   ,தமிழ் ஈழத்தில்
மண்டலா    வந்தது  ஆபிரிக்கா
சே  குவார்   ஓ வந்தது   அமெரிக்கா
காஸ்ட்ரோ வந்ததும்  அமெரிக்கா

எங்கோ  ஒரு மூலையில் -விடுதலையின்
வித்துக்கள்   மரமாய்  ஆக்குவதும் -பின்பு
பாரிய குண்டு கொண்டு    அம மரத்தை
அழித்து ,நிர்மூலம்  ஆக்குவதும்
உலக நாடுகளின்   வேடிக்கை  -இதனை
 பூலோக  மாந்தர்காள் !,புரிந்திடுவீர்


இன்று  லண்டன்  மீண்டும் ,  எரிகிறது
வன்முறை  அங்கெ , வெடிக்கிறது
இன   பேத முலாம்  அதனை,  பூசி அங்கு
பிரசங்கம்    மீடியா     செய்கிறது
நடந்ததும்   சாவும்   நீர் அறிவீர்
நடப்பது  என்ன ?  உலகறியும்
உன் வீட்டில் நடந்தால்   கொலை என்பார்
தன வீட்டில்  நடக்கையில்   விபத்தென்பார்!

ஐயகோ !  மானுடா  எழுந்திடுவாய்
கேளடா நீதியை   துணிந்து  நின்று
வான் முறை  வன்முறை   போர்முறைகள்
அறவே  ஒழிக்க   வழிசமைப்பாய்!

ஏனடா  சுயநலம்   மிக்கவனாய்
பூமியில் வாழ்கிறாய்  கேடு கெட்டு
வாழும் உயிர்கள்  யாவையுமே
ஆண்டவன்  படைப்பில்  ஓர் இனமே

நாளும் பொழுதும் நர பலிகள் -உலக
நாட்டிலே  நடப்பது   தர்மமாமோ?
வீட்டிலேயே  நடந்தால்   வேதனைகள் -தெருக்
கோடியில்  நடந்தால்  உனக்கில்லையோ?
பூட்டிய கதவுக்குள் கூடு கட்டி -நீ
கிணற்றுத் தவளையாய்   வாழ்வது மேன்?
உலக மக்கள்  யாவருமே! ,            புவி மீது பிறந்த  மன்னவர்கள்
சாதிகள் நிறங்கள்   பேதங்களை -உன்
பகுத்தறிவாலே நீக்கிவிடு,
வாய்  பேச முடியா ஜீவன்களும் -ஒரு
தாய்  ஈன்ற     உலகச் செல்வங்களே
மாயும் போது பட்ட  வேதனையை ,
மாண்டவர்  மீண்டிங்கு ,வந்து  சொல்லுவாரோ ?

ஆதலால்  எங்கள் உறவுகாள்சிந்திப்பீர்
ஆத்மார்த்த   அன்பால் பூமிதன்னை
அன்பெனும்  உறவால்   பின்னிக்கொள்வோம்
அன்பெனும்  உறவால்   பிணைந்து கொள்வோம் (ஸ்ரீ ராஜா )






ஆசையின் வேக்காட்டால் விம்மி தணியும் வெண்சங்கு காதலின் வயப்பட்டு துடிக்கும்

பாலும் கசக்கும்
 படுக்கையும்  வலிக்கும்
உன் மூச்சுக்காற்று  ப்பட்டு
தலையணையும்  வேர்க்கும்
ஆசையின்  வேக்காட்டால்
 விம்மி தணியும்
வெண்சங்கு
காதலின் வயப்பட்டு  துடிக்கும் மனதின்
பாரங்கள்  கூட
முட்களாய்  குத்தும்
படுக்கையின் மெத்தை
சொல்லவே  வார்த்தையின்றி
 தவிக்கும்  துடிக்கும்
உதடுகளும் ..
ஒத்தி  எடுக்கும்  முத்தத்திற்காய்
தினம் தினம்
மேங்கும்
உன் உள்ளத்தின்  துடிப்பால்
 இதயம்  சூடேற
 உவகையால்  மனம்    துணைக்கு
  ஏங்கும்
எப்போது வருவாயென
எதிர்பார்த்திருந்த
 உன் விழிகள்
எனை பார்த்து
 சிமிட்டி பேசும்
வார்த்தைக்குத்தானே
ஏங்கியது  என் உள்ளம்

அந்த சிமிட்டிய கணத்தில்
  எந்தன் உள்ளம் பறிபோனது
 உன்னிடம்


ஏக்கமான உன்கண்களிர்ற்கு
 இன்றென
 நான் செய்யும் ஜாடைக்கு
எதற்கு  உன் வாயில்  முறுவல் ?
இது முறுகல் நிலையின்  வெளிப்பாடோ?
 -அன்றி  புன்முறுவல்  தானோ இது?
அல்லது  எனைப்பார்த்து
  பரிகாசம்  செய்கிறதோ
  உன் இதழ்கள்
சொல்லாயோ
 நிலாவதனப்  பெண்ணே
துணிந்து

உன் அத்தானின் கை பிடித்து கால் பிடித்து

வாழ்க மணமக்கள் வாழிய பல்லாண்டு
உன் அத்தானின் கை பிடித்து
கால் பிடித்து
 உயிர் நாடி வளர்த்து
வளர்ந்து
 சமுதாய அமைப்பில் வளர்ந்து
 பண்பாட்டை வளர்த்து

பண பாட்டில் உயர்ந்து
  சீர் கொள்ள நம் மினத்தை
  வேர் தாங்கி
 பூமிப் பெண்போல்
 பொறுமையாய்
உலகில்  உயர்வாய்
நீ

நினைவு என்னும் சுழலும் சக்கரம் மாறி மாறி சுற்றி சுற்றி ஒரு மணி இலையானாய்....என் தூக்கம் கெடுக்கும் விட மாயிற்று

பச்சை துரோகம்
பசுமை நினைவுகள்

 கொல்லும் இரவாய் .எனக்கு
..கூறுவையோ  நீ

  உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும்
மறக்காது  என்னை  கொல்லட்டும்

நினைவு என்னும்
சுழலும் சக்கரம் மாறி மாறி

சுற்றி  சுற்றி  ஒரு மணி  இலையானாய்....என்
தூக்கம் கெடுக்கும் விட மாயிற்று

நனைந்த !!!!!!!!!!!!!!நனையும்!!!!!
  தலையணை  என்னை பார்த்து
தானும்  அழுகிறது

வெளியில்
பெய்யும்  மழை கூட
எனக்காக  அழுகிறதோ  என்னவோ----------- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே  என்
 கடந்த காலமும்

என் நிகழ்காலமும்

என் எதிர் காலமும்
என்னை பார்த்து  சுட்டு விரலை  நீட்டுகின்றனவே


இது  கூட  தெரியாத  நீயா  சொல்வது ?உயிரைக்கேட்டிருந்தால் தந்திருப்பேன்
மாறாக நீ எந்தன் உணர்வை
ஏன் தான் பறித்துச்சென்றாய்?என்று


தூரத்தில்  திருமண   மங்கள இசைஒலி கேட்கும் போதும்
உன் துரோகத்தின் நினைவு தான் வருகிறது

இருந்தும் நீ வாழவேண்டுமென
மனம் வாழ்த்துகிறது- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே
என்று  நானல்லவா   கூற வேண்டும் ?
எதுக்கு நீ வீண் வார்த்தை
இயம்புகிறாய் ?-உன் வாள் நுதலால்
  கொன்றது போதும்

உண்மை  வாளால்
 வீசி விட்டு
அமைதியாய்  வாழ்ந்து விடு

Donnerstag, 1. September 2011

தனாக்கா எனக்கு சகோதரம் மாதிரி அவங்க நல்லவங்க அவங்க மேல நான் பாசம் வைத்திருக்கிறேன் ,அன்பு வைத்திருக்கிறேன் .நான் எழுதும் கவிதைகளை யாரும் தப்பாக எடுக்க வேண்டாம் .அவங்களின் மனதை யாரும் கெடுக்க வேண்டாம் .தனாக்காவின் மனதை யாரும் எனது பெயரை பாவித்து கோபம் ஊடடினால் அதற்க்கு நான் பொறுப்பாளி இல்லை .தனாக்கவுக்கு ...என் இதய சுத்தியோடு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

தனாக்கா எனக்கு  சகோதரம்  மாதிரி அவங்க  நல்லவங்க 
அவங்க  மேல  நான்  பாசம்  வைத்திருக்கிறேன் ,அன்பு  வைத்திருக்கிறேன் .நான்  எழுதும்  கவிதைகளை  யாரும்  தப்பாக  எடுக்க  வேண்டாம் .அவங்களின்  மனதை யாரும்  கெடுக்க  வேண்டாம் .தனாக்காவின்  மனதை  யாரும் எனது  பெயரை  பாவித்து கோபம்  ஊடடினால்  அதற்க்கு நான்  பொறுப்பாளி  இல்லை .தனாக்கவுக்கு ...என்  இதய  சுத்தியோடு  மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன் siriraja

கூடிப் பிறந்தால்     குதூக்கலாமாம் -புவி மீது
கூடாது  பிறந்தாலும்  குதூகலம்  தான்

அடாது  பெய்யும்  மழை..கூடி அழுகிறதே
இடியோசை  முழக்கம் இட்டு
விம்மி  அழுகிறது

நேசமாய் வரும்  உறவும்   விரிசல்  கண்டுவிடும்
பாசமாய் பழகினாலும்  சந்தேகம்  வலுத்து விடும்
நாசமாய்   செய்பவர்கள்  நலியக்  கெடுப்பார்கள்
பூதலத்தில்   இது  உண்மை
புரிந்தால்  இது வும் உண்மை

பாசத்துக்கும் நேசத்துக்கும் களங்கம்  கூறலாமோ?-கவித்
தாகத்தால்  ..அவள்  மேல் எனக்கு  பெரு விருப்பு
யார் போட்ட  சாபம் இதோ ...

தனக்கா   ?  என்ன இது ?
மற்றவர்  பேச்சை கேட்டு
மதியும் கெடலாமோ ?

ஞாலத்தில் பிறந்தவர்கள் நயவஞ்சக  சூழ்ச்சி  சொல்வார்
காலத்தின் கட்டளை...........   கவி செய்வாய் .
ஏளனத்தில்  பெரும் துயரம்  என் முன்னே !

அக்கை  என நினைத்தேன்
அருந் தவத்தால்   இறைவன்  எனக்களித்த பொக்கிசமாய்
உன்னை  நினைத்தேன்
உன் கவி தன்னை காணாது  துடி துடித்தேன்

கற்றாரை கற்றாரே  காமுறவர்
ஆதலினால் ..உற்ற  சோதரமாய் 
என் உறவாய்  மற்றவர் முன்பு  உன்னை நினைத்து  மகிழ்வேன்

யாரது  கண் பட்டு   நலிந்தது  எம்முறவு
போனது போகட்டும் ..வா 
பாசத்தால்  கேட்கிறேன்  வா
கவி தாகத்தால்  கேட்கிறேன்  வா

நீ !!!!!!!!!!!!!!!!!!!!!
வரகவி  எனதக்கை
 மாசில்லா என் அன்பின்
 பொக்கிஷம் நீ
ஆதலினால்  கேட்கிறேன்

அக்  ,    கையாய்  ,   அக்கரையில்
இருக்காது    இக்கரையில்
இருக்கும்   உன் அம்பியின்
அக்கையாய்    வா

நாம் நடத்தும்  கவிப்போரில்
பூக்களாய்  உதிரட்டும்   எம் அன்பு

இப்பூக்களை  சூடி  மகிழ   எம் நண்பர் குழாம்
என்றென்றும்  தொடரும் .

அவர் தம் அன்பிற்கும்   உண்டோ  அடைக்கும்  தாள்
சொல்லக்கா   துணிந்து -உலகுக்கு
உனக்கொரு  தம்பி   ஜெர்மனி இல்  இருப்பதை
பறக்கும் விமானியாய்   அந்தரத்தில்  தொங்குவதை

உன் செங்கமல  இதழ்களை
விரித்து ..எனை தம்பி என அழைக்கும்
காலம்  வரை ...உன் அன்புக்காய்  ஏங்கும்
பாசமுள்ள    அம்பி இவன்

  வழி மேல் விழி வைத்து 
ஏக்கத்துடன் ...............!!!!!!!!!!