Freitag, 2. September 2011

ஆசையின் வேக்காட்டால் விம்மி தணியும் வெண்சங்கு காதலின் வயப்பட்டு துடிக்கும்

பாலும் கசக்கும்
 படுக்கையும்  வலிக்கும்
உன் மூச்சுக்காற்று  ப்பட்டு
தலையணையும்  வேர்க்கும்
ஆசையின்  வேக்காட்டால்
 விம்மி தணியும்
வெண்சங்கு
காதலின் வயப்பட்டு  துடிக்கும் மனதின்
பாரங்கள்  கூட
முட்களாய்  குத்தும்
படுக்கையின் மெத்தை
சொல்லவே  வார்த்தையின்றி
 தவிக்கும்  துடிக்கும்
உதடுகளும் ..
ஒத்தி  எடுக்கும்  முத்தத்திற்காய்
தினம் தினம்
மேங்கும்
உன் உள்ளத்தின்  துடிப்பால்
 இதயம்  சூடேற
 உவகையால்  மனம்    துணைக்கு
  ஏங்கும்
எப்போது வருவாயென
எதிர்பார்த்திருந்த
 உன் விழிகள்
எனை பார்த்து
 சிமிட்டி பேசும்
வார்த்தைக்குத்தானே
ஏங்கியது  என் உள்ளம்

அந்த சிமிட்டிய கணத்தில்
  எந்தன் உள்ளம் பறிபோனது
 உன்னிடம்


ஏக்கமான உன்கண்களிர்ற்கு
 இன்றென
 நான் செய்யும் ஜாடைக்கு
எதற்கு  உன் வாயில்  முறுவல் ?
இது முறுகல் நிலையின்  வெளிப்பாடோ?
 -அன்றி  புன்முறுவல்  தானோ இது?
அல்லது  எனைப்பார்த்து
  பரிகாசம்  செய்கிறதோ
  உன் இதழ்கள்
சொல்லாயோ
 நிலாவதனப்  பெண்ணே
துணிந்து

Keine Kommentare:

Kommentar veröffentlichen