Freitag, 2. September 2011

நினைவு என்னும் சுழலும் சக்கரம் மாறி மாறி சுற்றி சுற்றி ஒரு மணி இலையானாய்....என் தூக்கம் கெடுக்கும் விட மாயிற்று

பச்சை துரோகம்
பசுமை நினைவுகள்

 கொல்லும் இரவாய் .எனக்கு
..கூறுவையோ  நீ

  உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும்
மறக்காது  என்னை  கொல்லட்டும்

நினைவு என்னும்
சுழலும் சக்கரம் மாறி மாறி

சுற்றி  சுற்றி  ஒரு மணி  இலையானாய்....என்
தூக்கம் கெடுக்கும் விட மாயிற்று

நனைந்த !!!!!!!!!!!!!!நனையும்!!!!!
  தலையணை  என்னை பார்த்து
தானும்  அழுகிறது

வெளியில்
பெய்யும்  மழை கூட
எனக்காக  அழுகிறதோ  என்னவோ----------- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே  என்
 கடந்த காலமும்

என் நிகழ்காலமும்

என் எதிர் காலமும்
என்னை பார்த்து  சுட்டு விரலை  நீட்டுகின்றனவே


இது  கூட  தெரியாத  நீயா  சொல்வது ?உயிரைக்கேட்டிருந்தால் தந்திருப்பேன்
மாறாக நீ எந்தன் உணர்வை
ஏன் தான் பறித்துச்சென்றாய்?என்று


தூரத்தில்  திருமண   மங்கள இசைஒலி கேட்கும் போதும்
உன் துரோகத்தின் நினைவு தான் வருகிறது

இருந்தும் நீ வாழவேண்டுமென
மனம் வாழ்த்துகிறது- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே
என்று  நானல்லவா   கூற வேண்டும் ?
எதுக்கு நீ வீண் வார்த்தை
இயம்புகிறாய் ?-உன் வாள் நுதலால்
  கொன்றது போதும்

உண்மை  வாளால்
 வீசி விட்டு
அமைதியாய்  வாழ்ந்து விடு

Keine Kommentare:

Kommentar veröffentlichen