Donnerstag, 1. September 2011

தனாக்கா எனக்கு சகோதரம் மாதிரி அவங்க நல்லவங்க அவங்க மேல நான் பாசம் வைத்திருக்கிறேன் ,அன்பு வைத்திருக்கிறேன் .நான் எழுதும் கவிதைகளை யாரும் தப்பாக எடுக்க வேண்டாம் .அவங்களின் மனதை யாரும் கெடுக்க வேண்டாம் .தனாக்காவின் மனதை யாரும் எனது பெயரை பாவித்து கோபம் ஊடடினால் அதற்க்கு நான் பொறுப்பாளி இல்லை .தனாக்கவுக்கு ...என் இதய சுத்தியோடு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

தனாக்கா எனக்கு  சகோதரம்  மாதிரி அவங்க  நல்லவங்க 
அவங்க  மேல  நான்  பாசம்  வைத்திருக்கிறேன் ,அன்பு  வைத்திருக்கிறேன் .நான்  எழுதும்  கவிதைகளை  யாரும்  தப்பாக  எடுக்க  வேண்டாம் .அவங்களின்  மனதை யாரும்  கெடுக்க  வேண்டாம் .தனாக்காவின்  மனதை  யாரும் எனது  பெயரை  பாவித்து கோபம்  ஊடடினால்  அதற்க்கு நான்  பொறுப்பாளி  இல்லை .தனாக்கவுக்கு ...என்  இதய  சுத்தியோடு  மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன் siriraja

கூடிப் பிறந்தால்     குதூக்கலாமாம் -புவி மீது
கூடாது  பிறந்தாலும்  குதூகலம்  தான்

அடாது  பெய்யும்  மழை..கூடி அழுகிறதே
இடியோசை  முழக்கம் இட்டு
விம்மி  அழுகிறது

நேசமாய் வரும்  உறவும்   விரிசல்  கண்டுவிடும்
பாசமாய் பழகினாலும்  சந்தேகம்  வலுத்து விடும்
நாசமாய்   செய்பவர்கள்  நலியக்  கெடுப்பார்கள்
பூதலத்தில்   இது  உண்மை
புரிந்தால்  இது வும் உண்மை

பாசத்துக்கும் நேசத்துக்கும் களங்கம்  கூறலாமோ?-கவித்
தாகத்தால்  ..அவள்  மேல் எனக்கு  பெரு விருப்பு
யார் போட்ட  சாபம் இதோ ...

தனக்கா   ?  என்ன இது ?
மற்றவர்  பேச்சை கேட்டு
மதியும் கெடலாமோ ?

ஞாலத்தில் பிறந்தவர்கள் நயவஞ்சக  சூழ்ச்சி  சொல்வார்
காலத்தின் கட்டளை...........   கவி செய்வாய் .
ஏளனத்தில்  பெரும் துயரம்  என் முன்னே !

அக்கை  என நினைத்தேன்
அருந் தவத்தால்   இறைவன்  எனக்களித்த பொக்கிசமாய்
உன்னை  நினைத்தேன்
உன் கவி தன்னை காணாது  துடி துடித்தேன்

கற்றாரை கற்றாரே  காமுறவர்
ஆதலினால் ..உற்ற  சோதரமாய் 
என் உறவாய்  மற்றவர் முன்பு  உன்னை நினைத்து  மகிழ்வேன்

யாரது  கண் பட்டு   நலிந்தது  எம்முறவு
போனது போகட்டும் ..வா 
பாசத்தால்  கேட்கிறேன்  வா
கவி தாகத்தால்  கேட்கிறேன்  வா

நீ !!!!!!!!!!!!!!!!!!!!!
வரகவி  எனதக்கை
 மாசில்லா என் அன்பின்
 பொக்கிஷம் நீ
ஆதலினால்  கேட்கிறேன்

அக்  ,    கையாய்  ,   அக்கரையில்
இருக்காது    இக்கரையில்
இருக்கும்   உன் அம்பியின்
அக்கையாய்    வா

நாம் நடத்தும்  கவிப்போரில்
பூக்களாய்  உதிரட்டும்   எம் அன்பு

இப்பூக்களை  சூடி  மகிழ   எம் நண்பர் குழாம்
என்றென்றும்  தொடரும் .

அவர் தம் அன்பிற்கும்   உண்டோ  அடைக்கும்  தாள்
சொல்லக்கா   துணிந்து -உலகுக்கு
உனக்கொரு  தம்பி   ஜெர்மனி இல்  இருப்பதை
பறக்கும் விமானியாய்   அந்தரத்தில்  தொங்குவதை

உன் செங்கமல  இதழ்களை
விரித்து ..எனை தம்பி என அழைக்கும்
காலம்  வரை ...உன் அன்புக்காய்  ஏங்கும்
பாசமுள்ள    அம்பி இவன்

  வழி மேல் விழி வைத்து 
ஏக்கத்துடன் ...............!!!!!!!!!!


Keine Kommentare:

Kommentar veröffentlichen