Freitag, 2. September 2011

ஒற்றைக் காலில் தவம் செய்யும்அருஷுனனாய் .....

பிரசவ வலியின் பின்
  இன்பம் இன்பம்
மகவின் மழலை
 இன்பம் இன்பம்----------- .குழவி
செய்யும்  சேட்டைகள்
  வலி தான் ஆனாலும்
குலவி மகிழும் இன்பமின்பம்
கண் மணியே
நீ தூங்கி விட்டாய்
உனக்கு பாது காப்பாய்
 உன் இமைகள்
கண் மடல்களை
அணைத்துக்கொண்டு
உன்னுடன்
  தூங்குகிறது
பாவம் இவன்
வெளியே உன் கண்களுக்கு
பாதுகாப்பாய்

ஒற்றைக் காலில் தவம்
செய்யும்அருஷுனனாய் .........................

Keine Kommentare:

Kommentar veröffentlichen