Montag, 5. September 2011

மனதில் எஞ்சியிருப்பது குழப்பமா தெளிவா? வந்து போனதற்கான தடயங்களின் நிழல்களை ஏன் மனதில் போட்டு குழம்புகிறாய் ?

கனவு வந்து போன பின்பும்  காட்சி
என்ன  சொல்லும்?

மனதில் எஞ்சியிருப்பது குழப்பமா  தெளிவா?
 வந்து போனதற்கான தடயங்களின்
நிழல்களை
 ஏன்  மனதில்  போட்டு  குழம்புகிறாய் ?
நியங்களே இல்லாதபோது
கனவென்ன?  கற்பனைஎன்ன? நிஜங்களை பறித்துசெல்ல- நான் யார்?
விதி ???????  ஆஹா  விதி
எளிதாக  தப்பிக்கும்
எளிமையான வாழ்க்கை
தத்துவம்  விதி


கண்ணோடு தொடர்ந்து காலத்தால் வளர்ந்து
இயல்பான உருவாக்கமே என் காதல்

நிழலாய் பின்தொடர்கின்றேன் -உன்னை
உந்தன் நினைவுகளைச்சுமந்த படியே
பத்துமாதம்  சுமப்பவள் கர்ப்பிணி
வாழ்க்கையில் சுமப்பவன்  கணவன்
நான் யார் ?
உன்னை  இதயத்தில் சுமப்பதால்  மற்றவர்  முன்
கூனி
குறுகி நடக்கிறேனே

நான் யார்?

Keine Kommentare:

Kommentar veröffentlichen