Freitag, 9. September 2011

அழகு தேவதை அன்பு கொண்டால் அதுவே எனக்கு தேன் வதை

அழகு தேவதை
அன்பு கொண்டால்
அதுவே  எனக்கு  தேன் வதை

இன்புறு  முறுவல்  அவள்
முகம் கண்டால்
இதுவே  சொர்க்கம்
எனக்கினி


கால்களில்  தயக்கம்
சேர்ந்திட்ட  நடுக்கம்
அதுவே உந்தன்
எழில் நடனம்


துணைக்கு துணையாய்
நான்  வருவேன்
அனைத்துக் கொள்வாய்
என்கண்ணே


பூமியில்   உதித்த யா வுயிரும்
காதல்  கொள்வது  இயற்க்கை  அன்றோ !!!!!!!!!!


பூதளம்  மீது  அன்றிலைப்போல்
சேர்ந்து வாழ  மையல்  கொண்டேன்


தினவெடுத்த  என் தோள்  உந்தனுக்கு
உரமேறி  நிற்பது
அறிவாயே


செம்பொற் கலசத்தில்  பால்  குலுங்க
நீ  பள்ளியறை வரும் நாள்
எந்நாளோ ???????????????

Keine Kommentare:

Kommentar veröffentlichen