Samstag, 10. September 2011

பொல்லாப் பூமியில் பிறந்து விட்டு இல்லற வாழ்க்கை இல்லை எனில் கல்லறை போகையில் நாம் கண்ட வாழ்வில் பயன் ஏதும் உண்டோ சொல் ????

உறக்கம்  இல்லா  முன் இரவில்
உள்ளத்தில் மோதும் உன் நினைவு
கள்ளம் இல்லா என் மனதை
விரகத்தீயில்  எரிக்கிறது


சொல்ல முடியா உணர்வுகளை
தீர்க்கும்  மருந்தை
ஆவாயோ?????????


காயம்  பட்ட   உடல்களிற்கு
சஞ்சீவ  மலை   மருந்தாகும் !
வேகும்  உடலின்   ஆசைகளை
தீர்க்கும் மருந்து நீ  தானே


பாயில்  படுத்து  உணர்சிகளை
போகிட  இவனும்  கேட்கவில்லை


வாழும் போது  வழித்துணையாய்
தேடும்  சுகத்தில்  சரிபாதி


நாடும்  ஊரும் நயந்துரைக்க
நல்லறம்  காண துடிக்கிறேன் யான்


பொல்லாப்  பூமியில்  பிறந்து விட்டு
இல்லற வாழ்க்கை  இல்லை  எனில்


கல்லறை  போகையில்
நாம்  கண்ட
  வாழ்வில் பயன் ஏதும்
  உண்டோ  சொல் ????


தாம் தாம்  தம் மடி
 நிரப்புகின்ற
தரம் கெட்ட  நேரத்தில்
  வாழுகின்றோம்
மரபோடு  தமிழ்  வாழ்வதற்கும்
மீண்டும் உயிரோடு நம் தமிழ்  நிமிர்வதர்க்கும்
நான்
மாண்டு போகுமுன்  வந்துவிடு

மயிலே  உயிரே  ஆரணங்கே
என் வதன  நிலவே  நீ தானே!
செய்யும்  செயலை   நெறி ப்படுத்த
செவ்வரி ஓடிய  உன் எழில்  நயன
பார்வை  ஒன்றை  என் மீது ............
படர விடாயோ  என்   பெண்ணே??


மன்னன் எந்தன்
கால்  அடியோசை
  காரிகை  உனக்கு  கேட்கலையோ?????????? 
                                                         
ஸ்ரீராஜ

Keine Kommentare:

Kommentar veröffentlichen