Donnerstag, 8. September 2011

வன்மமும் வக்கிரமமும் சேர்ந்து உன் மனதை சுற்றி வளைத்து சூறையாடுகிறது

இருட்டு நேரம் குளத்தில் அமர்ந்து
  நீ பார்க்கிறாய்

பாவம்  நீ
எல்லாம்  பேயாய் 
உனக்கு  தெரிகிறது


மற்றவர்களின் தூண்டுதலால்
  உன் மனம்  பேதலிக்கிறது

சேற்றில் முளைத்த தாமரை நீ
உனைப்பறிக்க
 சேற்றில் இறங்கி முகர்ந்து விட்டு
 கால் கழுவி  வெளியேறி
 இன்னோர் குளத்தில்
 அல்லிப்பூ பறிக்கும்
 கயவனாடி  நான்?
சொல்லுடி ,


,,உன் அனுமதியோடு உன்னை
  எடி என்றழைக்கும் பாக்கியவான்  நான் அடி

உன் பிறப்பில் நீ  என்னை  ஒதுக்கிவிடு
கவலைப்படாதே

மருபிறப்பிலாவது  உன்னை தீண்டும் தகமைக்காய்
  இறைவனிடம் மன்றாடும் யாசகன் நான்


வன்மமும் வக்கிரமமும் சேர்ந்து உன் மனதை
சுற்றி வளைத்து  சூறையாடுகிறது

உன் கண் முன் வெண்மையாய்  தெரிகிறதே
 அது  என்ன?
  என்றோ  ஒரு நாள் அவைகள்
 பேய்கள் என்றுணரும்  காலம் வரும்


இருட்டில்  தெரிவதும்  பேய்களல்ல
வெளிச்சத்தில்  தெரிவதும்
தேவா அமிர்தமல்ல

  ஆலகால விடமாம் கள்ளும்  கூட 
பால் போல் வெண்மை தான்


கண்ணே  உணர்ந்து கொள் என் மனம் வெள்ளை என்ற முலாம் பூச முயலவில்லை
தெளிந்த  நீரோடை


இங்கே  சீதளத்தேன்ற்றலும்
பாடும் வண்டினமும்  ,கொஞ்சும் புள்ளினமும் தானுண்டு

வருவாயா?
இச்சுகத்தை  நாமும்  அனுபவிக்க ?

Keine Kommentare:

Kommentar veröffentlichen