Montag, 22. August 2011

உனக்காக வாழும் இதயம்

உனக்காக வாழும் இதயம்
உறங்காது கண்ணே ..
எனக்கே ...உறவான உன் நினைவுடன்
என் முகம் காண மறுக்கும் உன் விழியில்

...என் காதோடு பேச மறுக்கும் உன் குரலில்

என் நினைவை நினைக்க மறுக்கும் உன் நினைவில்

என் துடிப்பை உணர மறுக்கும் உன் மனதில்

என்னையே மறக்க நினைக்கும் உன்னில்

நான் தெரிந்துகொண்டேன்

என்னை நீ வெறுத்து சென்றதை

என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை...............நாம் ஒன்றாகப் பயணித்த
நம் பாதச் சுவடுகள்
இன்றும் என் மனதில்
ஒன்றாகவே இருக்கின்றன

நீ எனக்குள் இத்தனை
வலிகளை தந்தபோதும்
உன் நினைவுகள் எதையும்
நான் அழிக்கவில்லை

என்னுயிரை நானே
எப்படி அழிக்க முடியும்
அன்பே உன்னை நேசிக்க -என்
நெஞ்சமெல்லாம் உன்னுள்
தஞ்சமான பின்பு..
என் உள்ளத்தின் தழும்புகள்
மாறாத வடுக்களாய் .......

Keine Kommentare:

Kommentar veröffentlichen