Montag, 22. August 2011

உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ..........!!!!!

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும்
எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!
...வாழ்வொன்று தர வழியில்லை என்றால்
வரமொன்று தந்துவிடு அன்பே
நீ என்னை விட்டு நீங்கிய கணமே
நான் நீறாக வேண்டும் என்று.........என்று என்னை ஏன் -நீ
கொல்லுகின்றாய்
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும்
உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும்
காதல் போரும்...எனக்கான உனது
பார்வைகாக
என் வாழ்வு
நகர்ந்து கொன்டிருக்கிறது...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.ன்னோடு நீயிருந்தால்
வானம் கூட என் கைவசம்.....
என்னை விட்டு
நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்......
உன் பெயரை உச்சரித்தே
நிதமும் வாழ்கிறேன் .......
அன்பே
உன் சுவாசத்தில் மட்டுமே
நான் வாசம் செய்வேன் ..........!!!!!
உறவு என்று எனை அழைக்கத் துடிக்கும் உன் உதடுகளை -ஒத்தி விட
ஓடி வருவேன் கண்ணே .நான் விரைவில்

Keine Kommentare:

Kommentar veröffentlichen