Donnerstag, 25. August 2011

இப்போ பூவாகி உனக்காக காத்திருக்கிறேன் வா தோழி என்னை முகர்ந்து கொள் அதுவே நீ தரும் முத்தமாக இனிக்கட்டும் எனக்கு

ஓஓஓஓஓஓஓ பெண்ணே
உன் இதயத்தில் நான்
  பயணம் செய்யும்போது
கரியமில வாயு  என்று  என்னை
 உன்   நுரை ஈரல்  வெளியேற்றியதை
  நீ  அறியாய் .........
வெளியேறிய நான் கரியமில வாயுவாக  தரையை  தொட்ட போது,
புற்கள்  கண்ணீரை(பனித்துளிகள்)  தலையில் தாங்கி
என்னை  வரவேற்றன
மரங்களின் சுவாசம்  என்னை தன சுவாசமாக என்னை
ஆகர்ஷிக்க......................மரங்களின் பசுமைக்கு 
காரண மாகி இன்று  பூவாக மலர்ந்திருக்கிறேன்
ஏன் தெரியுமா??????????
உன் தலையை  அலங்கரிக்க .........


உன்  மனம் என்னும் வீதியில்
குறுந்தூரப் பயணியாய்நான் வந்தேனா ?
இல்லையே  உன்னை தொடர்ந்தேன்
என்பதே  உண்மை
சேரும் இடம் வருமுன்னே
 மாற்றிவிட்டாய்என்னை நீ
இப்போ பூவாகி  உனக்காக காத்திருக்கிறேன்
வா தோழி  என்னை  முகர்ந்து கொள்
அதுவே  நீ தரும்  முத்தமாக  இனிக்கட்டும்  எனக்கு

Keine Kommentare:

Kommentar veröffentlichen