Donnerstag, 25. August 2011

இன்னும் ஏன் அடி மவுனம் ?????????? எதற்க்காக ?

நேற்று நீ சொன்ன ஆறுதல்
நினைவுகளாய் ,,,,
தேருதலாய்...
என்னையும் உன்னையும்  சுற்றும்
ஒளி வட்டங்களாய்  விம்பங்களாய்  ...

உள்ளத்தில் உள்ள   துடிப்பின்  ஓசையை
வீழும் அருவியின்  மேல் எழும்
  தூவானமாய் ...

என்னை  குளிர வைத்தன

உன் அன்பில் கட்டுண்ட
அடிமை நான்

என் உள்ளத்தின்  உணர்வுகளை  -காகிதத்தில்
கவிதையாய் வரிந்தேன்

உனக்கு  அனுப்ப  முன்பு
 எனக்கு  முன்னே
எ ன் காகிதம்  அழுதது

என் கண்ணோரம் வந்த
கண்ணீர் -தானும் ........
காதலால்  அழுகிறது !!!

விண் ஓரம்
 போய் விடுவேன்...
ஆனால் ...............
  உன் விரல் பற்றி -கரம் காக்க
 நான் இல்லை என்றால்
 தவிப்பாயே  என நிதம் எண்ணி
நாட்களை எண்ணுகின்றேன்

விபத்தால்   உடல் எல்லாம் கட்டு

ரண வலியின்  வேதனையை
உன் நினைவு  மறைக்கிறது  கண்ணே

உனக்காகத்துடிக்கும்
  என் இதயம் சொல்கிறது

இங்கே பெய்யும் மழைக்கு -எனக்காய்
அங்கு நீ குடை பிடிப்பதை ..............

அன்பே காதல்  விதை போட்டாய்
வளர்ந்து செடியாகி
என் முன்  நிக்கிறது

கத்தும் கடல் கடந்து
இங்கே நான்
அச்செடிக்கு  கண்ணீரால்
நீர் ஊற்றி ...............
வளர்த்தேனடி வளர்க்கிறேனடி ..

 இன்னும் ஏன் அடி மவுனம் ??????????
எதற்க்காக ?

சொல்லிவிடு
செத்து விடு என்று

உனக்காக ..........
அதனையும்  செய்வேன் ..
சொல்லிவிடு
  அதையேனும் உன் வாயால் !!!!!!!!!!!!!


தூக்கு மரத்தின் -கயிற்றின்
மரணத் தருவாயில் ..
சிரித்த  படி  கேட்கின்றேன்
என் கடைசி ............
ஆசை என்னவென்று

நான் சாகும் போது கூட
உன் மடியில்
தூங்க வேண்டும்
தருவாயா  தருவாயா தருவாயாஆஆஆஆஆ ??????????

Keine Kommentare:

Kommentar veröffentlichen