Mittwoch, 24. August 2011

அன்று நீ விட்ட பெரு மூச்சு என்னை இங்கு வெயிலாகக் -சுடுகிறது

அன்று நீ விட்ட பெரு மூச்சு
என்னை இங்கு  வெயிலாகக்  -சுடுகிறது
அனலாய் அல்ல   அணு உலையாய் -கண்ணே
கன்று தேடி அலையும்    -தாய்ப் பசுபோல்
இன்றல்ல ..என் இதயம் துடிக்கும் வரை -என் சென் பகமே
உன்னை விரும்பி  நான் பட்ட துயர்  எல்லாம் போதுமடி
முன்னை  தொடர்போ  நீ  எனக்கு  -கண்ணே
கண்ணின் மணி  ஒளியே .எண்ணுக கணக்கின்றி  என் இதயம் துடிக்குதே
வண்ண நிலவே .வானத்து   வெண் நிலவே
என்ன வடி  என் கோலம் ,,,...
உன் நினைவால்  நான் பட்ட துயர்  போதுமடி
ஏதேனும்  ஒரு வார்த்தை   சொல்லாயோ --
வெட்கமோ   உனக்கு இன்னும் -என்
பெட்டகமே   கட்டுக் கடங்கா என் ஆசை  கரை புரண்டு  ஓடுதடி
செத்து பிழைத்தேன் என் கண்ணே
என்னை பெத்தவள் போல்  துடிக்காயோ
என நான் ஏங்கி நின்ற வேளை
வந்த ஒரு செய்தியொன்று
நிறுத்தியது  என்னுயிரை
உண்மையா இது
சொல்லு  கண்ணே
நீ என்னை காதலிக்கின்றாயாம்
என் உயிரை காப்பாற்ற  யார்  செய்த
 பரப்புரையோ
உண்மை என்றால்   என்னை  -நீ
அணைத்துக் கொள்  ...........
இல்லை என்றால் !!!!!!!!!!!!!!!!
 என்னை  அணுகிக்  கொல்!!!!!!!!!!!!!!!
நிதம் நிதம் என்னை கொல்லாதே-உன் பெயர்
நித்தம்  துதி பாடும்   என்னுயிரை கொன்று விட
ஒரு  தோட்டா  போதுமடி -ஒரே
ஒரு தோடடா போதுமடி

Keine Kommentare:

Kommentar veröffentlichen